Archive for September 30th, 2009
கோபால்சாமி வைகோ ஒரு இந்திய தேசத் துரோகி இல்லையா ?
புலிகளுடன் தொடர்பு கொண்டு இந்திய இராணுவத்துக்கு எதிராக செயல்பட்ட கோபால்சாமி வைகோ ஒரு இந்திய தேசத் துரோகி இல்லையா ?
ஒரு இந்திய முஸ்லிம் கஷ்மீருக்கு சுற்றுலா சென்று வந்தாலே முஸ்லிம் பயங்கரவாதி இந்திய தேசத் துரோகி என முத்திரை குத்தும் தமிழ் நாட்டு இனவாத ஊடகங்களுக்கும் சினிமாத் (கூத்தாடிகள்) துறைக்கும் இந்திய பாசிச பாதுகாப்பு படைக்கும் இது ஒரு இந்திய தேசத் துரோகமாக தெரியவில்லையா ?
1.
2.
3.
யாழில் பொலிஸ் சேவைக்கு 880 பேர் முதற்கட்டத் தெரிவு

யாழ். மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவைக்கு இணைக்கும் செயற்றிட்டத்தில் 880 பேர் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை யாழ். செயலகத்தில் நேர்முகத் தேர்வும் எழுத்துப் பரீட்சையும் இடம்பெற்றன.
யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவையில் இணைவதற்கு 400 பெண்கள் அடங்கலாக 6500 பேர் விண்ணப்பித்த போதும் 880 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மற்றையவர்கள் வயது கூடியவர்கள் மற்றும் திருமணமானவர்கள் என்பதால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சர் மாரப்பன தெரிவித்தார்.
பொலிஸ் சேவையில் இணைப்பதற்காக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையங்களில் முதற்கட்ட தேர்வு இடம்பெற்றது. யாழ். குடாவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு 500 இளைஞர், யுவதிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
virakesari
M.L.A.M ஹிஸ்புல்லாஹ் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பிற்போடப்படவுள்ளது.
![]()
கிழக்கு மாகாணசபையில் நேற்று சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை .
கட்சி தலைவர்களுக்கு இடையில் இணக்கமின்மை காரணமாக இந்த விவாதம் இன்று நடைபெறவில்லை. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தின் பிறிதொரு தினத்திற்கு அந்த விவாதம் பிற்போடப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமன விடயத்தில் தலையிட்டமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தப்பட்ட நிலையில் அவர் மீது ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.









