Lankamuslim.org

One World One Ummah

Archive for September 26th, 2009

யால காட்டுப் பகுதியில் ஆயுதம் தரித்த நபர்கள்

leave a comment »

http://3.bp.blogspot.com/_otWn2PlEOdY/RxwVfphOT3I/AAAAAAAACAE/draNCwgAGjg/s400/tiger.jpg

யால காட்டுப் பகுதியில் ஆயுதம் தரித்த நபர்கள் நடமாடுவதாக  முறைப்பாடு யால வனப் பகுதியில் ஆயுதம் தரித்த நபர்கள்  நடமாடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்தத் தகவல்களை அடுத்து யால காட்டுப் பகுதியை அண்மித்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீண்டும் பீதியடைந்துள்ளனர்.

கறுப்பு நிற ஆடைகள் அணிந்த குழுவினர் ரி 56 ரக துப்பாக்கிகளுடன் காட்டுப் பகுதியில் சஞ்சரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப்  பயங்கரவாதிகளாக  இருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை கண்டு பிடிக்கும் நோக்கில் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

புலிப்  பயங்கரவாதிகள்  யால காட்டுப் பகுதியில் நடமாடுவதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து எல்லைப் புறங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை குறித்த பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ராம் மற்றும் கேணல் நகுலன் ஆகியோர் யால காட்டுப் பகுதியில் தங்கியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொனராகலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசேட தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு இணைய தகவல்

Written by lankamuslim

September 26, 2009 at 12:33 pm

பலவந்தமாக வெளியேற்றபட்ட முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

leave a comment »

http://1muslimnation.files.wordpress.com/2007/02/sri-lankan-north-east-muslims.jpg?w=138&h=110

வட மாகாணத்திலிருந்து  1990ம் ஆண்டு  பலவந்தமாக வெளியேற்றபட்டடு முகாம்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் வாழ்ந்து வருகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக் கையை மேற்கொள்ள அர சாங்கம் நடவடிக்கை எடு த்து வருகிறது. இதற்காக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவை கள் அமைச்சினால் விண்ண ப்பம் கோரப்பட்டுள்ளது.

மீளக்குடியேறவிருக்கும் மன்னார் மூர்வீதி மக்கள் தொடர்பான விபரங்களை

மீள்குடியேற்ற அமைச்சிற்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இவ்விடயம் சம்பந்தமாக மன்னார் மூர்வீதி மக்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம், 126/1 ஏர்னோல்ட் ரட்நாயக்கா மாவத்தை, கொழும்பு-10 (டீன்ஸ் றோட் சந்தி) யுனிக் சர்வதேச பாடசா லையில் இதற்கான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதால் இந்த கலந்துரையாடலில் அனைத்து மன்னார் மூர்வீதி மக்களம் தவறாது கலந்து கொள்ளுமாறு அமைப்பினர் கேட்டுள்ளனர்.

இதன்போது, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சால் கோரப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படவுள்ளது. கீழ்வரும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்ட மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைப்பினர் கேட்டுள்ளனர். தொலைபேசி இல: 0774162311, 0773223930, 0714293668, 0777330928

Written by lankamuslim

September 26, 2009 at 11:57 am

வட மாகாண முஸ்லிம்கள் 20 வருடங்களாக அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்

leave a comment »

http://www.alaikal.com/news/wp-content/pdudin.jpg
முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் பற்றி  அமைச்சர் றிசாத்

புத்தளம் தில்லையடி  அல்-ஜித்தா மீள்குடியேற்ற கிராமத்திற்கான தொழில் பயிற்சி நிலையம், மற்றும் அல்-ஜித்தா பள்ளி வாசலுக்கான தண்ணீர் விநியொகம் என்பனவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (2009.09.25)இடம்பெற்றது. அதில அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும போது இன்றைய சூழலில், எமது மக்களின் மீள்குடியேற்றம் குறித்து தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமது பிரதேசங்களுக்கு மக்கள் செல்லும்போது அவர்களுக்கான உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் அவசியம் தேவைப்படுகின்றன எனக் குறிபிட்டார்

பள்ளி பரிபாலன சபைத் தலைவர்.எம்.முஹைமின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கில் பயங்கரவாதத்தின் பின்னர் எத்தனையோ அபிவிருத்திகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. வட மாகாண முஸ்லிம்கள் 20 வருடங்களாக அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் இழந்தவற்றுக்கு நியாயமான நஷ்ட ஈடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய தேவை எமக்குள்ளது.

தமிழர்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று கூறி வந்த அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள், இன்று மக்களது மீள்குடியேற்றம் குறித்து மட்டுமே அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

எமது சகோதர தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களில் மீள்குடியேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இவர்கள் இந்த முகாம்களில் தற்காலிகமாகவே குடியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் எம்.பியாக இருப்பதற்கு உதவி செய்தவர்களில் இப்பகுதியைச் சேர்ந்த மர்ஹூம்களான அன்சாரி, ஆப்தீன் ஆகியோரை மறக்க முடியாது. அவர்களின் தியாகமே இன்று இந்த மீள்குடியேற்றக் கிராமம் அபிவிருத்தி அடைவதற்கு முக்கிய காரணம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைச்சர் 18 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் எம்.அமீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் டபிள்யூ.எஹியான், பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன், கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான், யாழ். மநாகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

Written by lankamuslim

September 26, 2009 at 11:23 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers