Archive for June 2009
13ஆம் திருத்தத்தை அமுல்படுத்தினால் அரசிலிருந்து ஹெல உறுமய வெளியேறும்
| தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித் துள்ளார்.
அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்துள்ள அவர், இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசு இதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டிவரும். 13 ஆவது திருத்தச் சட்டம் நாட்டிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது முழுமையாக அமுல்படுத்தப்படாமல் உள்ளதால் தான் நாடு இதுவரை மோசமான பாதிப்புகளிலிருந்து தப்பியுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதையும் எதிர்க்கிறோம். தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சமூக கௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. இலங்கை போன்ற சிறிய நாடு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் தேவையற்ற பொருளாதாரச் செலவுகளையே எதிர்கொள்ள வேண்டிவரும் என்றார் lankasri.com |
M.ஷாமில் முஹம்மட் ஒரு சமூகவியல் , அரசியல் , இஸ்லாமிய எழுத்தாளர்
M.ஷாமில் முஹம்மட் ஒரு சமூகவியல் , அரசியல் , இஸ்லாமிய எழுத்தாளர்களில் ஒருவர் இவர் எமது இணையத்தள குழுமத்துக்கு எழுதிவருபவர் இவர் இலங்கையின் குறிப்பிடத்தக்க ஒரு சமூகவியல் , அரசியல் எழுத்தாளர்களில் ஒருவர். இவரின் ஆக்கங்கள் சமூக, அரசியல், இஸ்லாமிய ஆய்வுத்திறன் கொண்டவை , தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகிய இரு மொழிகளிலும் இவரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன இவர் தனது தனிப்பட்ட பார்வை மற்றும் அணுகுமுறை , மொழி நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
ஒரு எழுத்தாளர், என்பதுடன் மொழிபெயர்ப்பாளர், அரசறிவியலாளர். என்று குறிபிடும் அளவுக்கு தனது ஆக்கங்களை தந்துள்ளார் தமிழ் மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் , ஆங்கிலம் , அரபு , மொழி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
இவரின் ஆக்கங்கள் பல கட்டுரைகளாக தமிழ் , ஆங்கில மொழி இணையத்தளங்கள் , மற்றும் தமிழ் , ஆங்கில மொழி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன M.ஷாமில் முஹம்மட் என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் எழுதி வருகின்றார் இவர் பனி தொடர எமது வாழ்த்துக்கள்
அவரின் மெயில் முகவரி:
m.shamilmohamed@gmail.com
இலங்கையில் டெங்கு நோய் தொற்றுக்களை இல்லாதொழிக்கும் பக்றீரியா
இலங்கையில் டெங்கு நோய் தொற்றுக்களை இல்லாதொழிக்கும் பக்றீரியாக்களை கியூபாவிலிருந்து தருவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 165பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெங்குநோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா கியூப தூதுவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்தவகை பக்றீரியாக்களை அனுப்பிவைக்க கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பீ.ஐ.ரி என்னும் பக்றீரியாக்கள் டெங்குநோய் கிருமிகளை இல்லாதொழிக்கும் திறனைக் கொண்டவையென கூறப்படுகின்றது. தெரிவித்துள்ளார். குறித்த வகைப் பக்றீரியாக்களை பயன்படுத்துவது தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை ரஸ்யா இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதேவேளை இந்தியா மற்றும் மலேசிய நாடுகளும் இந்த பக்றீரியா பாவனை முறைமூலம் நன்மையடைந்துள்ளன.
athirady.org
அரசில் இருந்து விலகுவோம் ஜாதிக ஹெல உறுமய பயமுறுத்தல்!
13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலம் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை அரசு வழங்க முன்வருமானால் அரசில் இருந்து விலகுவோம் என்று ஹெல உறுமய அரசிற்கு பயமுறுத்தல் விடுத்துள்ளது.
neruppu.com
ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு இலங்கை அனுமதி
ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு இலங்கை அனுமதி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான “சேவா இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பிற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்தியா ஊடகங்கள் கூறுகின்றன .
இவர்கள் பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகள் பல ஆயிரம் முஸ்லிம் உயிர்களை குடித்த , பல ஆயிரம் முஸ்லிம் பெண்களின் கற்பை சூறையாடிய வெறி நாய்கள் அப்பாவிகளின் உயிர்களைக் குடிக்க வெறித்தனமாய் அலைந்த அந்த வெறி நாய்களை உருவாக்கிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ் மிக பயங்கரமான பிணங்கள் விழுங்கும் அமைப்பு.
21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகள் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள்ள். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களைப் பார்த்து நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று நரித்தனமாக ஊளையிடுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு சதுர அடி நிலத்தையும் குஜராத்தாக மாற்றுவோம் எனக் கொக்கரிக்கிறார்கள்.
இந்நிலையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயங்கரவாத கிளை அமைப்பான “சேவா இன்டர்நேஷனல்’ உள்ளிட்ட சில அமைப்புகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.எவர்கள் ஆம் நாட்டிலும் முஸ்லிம் ஹிந்து கிரிஸ்துவ முரண்பாடுகளை திட்டமிட்டு உருவாக்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை.
ஆர்.எஸ்.எஸ் ஸின் கொடூர முகம் -.விடியோ –.வெளிச்சமாகும் பல திடுக்கிடும் உண்மைகள். மெக்காவையும் MECCA, மதீனா MADHINA வையும் தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.
யாழ். வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் சட்ட நடவடிக்கை?
|
இத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தது. வேட்பாளர் ஒருவரின் கையொப்பம் குறித்த சந்தேகத்தை அடுத்து அந்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய சட்ட ஆலோசகர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நிசாம் காரியப்பர் கூறியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
இலங்கை படகு அகதிகளுக்கு புகலிடம் வழங்க பிரான்ஸ் முடிவு
|
இலங்கை, ஐவரி கோஸ்ட், சோமாலியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 பேர்களில் 20 சிறுவர்களும் உள்ளனர். ஐரோப்பாவுக்கு படகுகளில் செல்லும் குடியேற்ற வாசிகள் மோல்ரா கடலில் வைத்தே அனேகமாக மீட்கப்படுகின்றனர். மோல்ராவுக்கு இந்த விடயத்தில் உதவியளிப்பதாக பிரான்ஸ் அறிவித்திருக்கிறது. மோல்ராவின் தலைநகர் வலெற்றாவில் பிரெஞசு தூதரகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரான்சின் குடிவரவுத்துறை அமைச்சர் எரிக் பீசன் இதனை தெரிவித்திருக்கிறார். ஐரோப்பாவில் உங்களின் எதிர்காலத் திட்டத்திற்கான சந’தர்ப்பத்தை பிரான்ஸ் வழங்குகிறது என்று அகதிகளுக்கு பீசன் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் பிரான்சின் மதச் சார்பின்மை பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் அங்கு பீசன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரான்ஸின் உட்துறை அமைச்சர் கார்ம் மிங்சூட் யொனிச்சி கூறுகையில், பிரான்ஸின் தீர்மானமானது மனிதாபிமான நடவடிக்கை என்றும் இது ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னுதாரமாக அமையும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை படகில் சென்ற 100 குடியேற்ற வாசிகளும் பிரான்சில் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வைபவத்தில் படகில் அஜுசென்ற அகதிகளின் சார்பாக ஆங்கில மொழியில் உரையாற்றிய ஹபிபா அமீர் மூஸா கூறுகையில் கடலில் படகில் சென்ற தங்களை காப்பாற்றியதற்காக மோல்ராவுக்கும் தங்களை புகலிடம் தர ஏற்றுக்கொண்டுள்ள பிரான்ஸிற்கும் நன்றி தெரிவித்தார் |
முரளிதரன், சந்திரகாந்தன் அணிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தில் சேர்கின்றனர்
![]()
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா),கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகிய இருவரினதும் அணிகளைச் சேர்ந்தோர் இராணுவ வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் முரளிதரனின் பிரிவில் உள்ள உறுப்பினர்களில் 540 பேர் இராணுவத்தில் இணைய விண்ணப்பித்துள்ளனர் எனவும், இவர்களில் 140 பேர் ஏற்கனவே இராணுவத்தில் இணைக்கப்பட்டு விட்டனர் எனவும், எஞ்சியுள்ள விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் படையினரால் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் வி.முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமது அணியில் 100 பேர் இராணுவ வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் இதுவரை 40 பேர் இராணுவத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) கூறியிருக்கிறார்.
Ilakku.com
பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?
25.6.2009 ‘இந்தியா ருடே’ குழுமத்தின் ‘ஹெட்லைன்ஸ் ருடே’க்கு செ.பத்மநாதன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:
பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றிய உண்மைகள் என்ன?
எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளுடனான போரில் மே 17 ஆம் நாள் மாவீரர் ஆனார்.
இறுதி மணித்துளிகள் வரை நீங்கள் தொடர்பில் இருந்தீர்களா? அந்த இறுதி மணித்துளிகள் எப்படியாக இருந்தன?
ஆம், அவரின் தொடர்பு இணைப்புத் துண்டிக்கப்படும் கடைசி மணி நேரம் வரையில் நான் எமது தலைவருடன் தொடர்பில் இருந்தேன். எனது இறுதித் தொடர்பு கேணல் சூசையுடன் இருந்தது. அந்த நேரத்தில் அவர் சிறிலங்கா படையினருடன் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியை கடைசி மணிவரை வழி நடத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் களத்தில் நடப்பதை விபரமாக அவர் எனக்கு விபரித்தார்.
கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நிறையக் கோரமும் பயங்கரமும் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருந்தனர். அங்கே மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ, காயப்பட்டவர்களைக் கவனிப்பதற்கு இருக்கவில்லை. மருத்துவ கவனிப்பு இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். எமது தலைவர் சிறிலங்கா இராணுவத்துடன் மோதி ஈழத் தமிழ் தேசியத்துக்காக தமது உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார் எனவும் சூசை தெரிவித்தார்.
பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?
எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவல்களின் படி எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணியில் இணைந்து சிறிலங்கா படையினருடனான போரில் இறுதி நேரத்தில் அவர்களும் வீரச்சாவடைந்தனர். இந்தக் கணம் வரை தலைவரின் துணைவியார் மதிவதனியும் இளைய மகன் பாலச்சந்திரனின் கதியும் என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல் எமக்கு கிடைக்கவில்லை.
அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு பன்றிக் காய்ச்சல்
| அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டுள்ளது.
‘ஸ்வைன் புளூ ‘ எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அமெரிக்காவில்தான் மிக அதிகமாக காணப்படுகிறது. மிக வேகமாக பரவி வரும் இந்நோய், அமெரிக்காவில் இதுவரை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 6 சதவீதத்திற்கும் அதிகமானோர் நகர்ப்புறங்களைச் சார்ந்தவர்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். |
புலிகளால் கடத்தப்பட்ட யாழ் முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு !
புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களுக்கு ஒருமாத காலத்திற்குள் நட்டஈடு வழங்கப்படுமென மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புலிகளால் கடத்தப்பட்ட 32யாழ் முஸ்லிம் இளைஞர்களின் கதி இதுவரை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களின் குடும்பங்கள் கடந்த 20வருடங்களுக்கும் மேலாக எதிர்நோக்கும் கஸ்டநிலை தொடர்பாக யாழ். தொழில்சார் அமைப்பினர் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வமைப்பினர் அமைச்சர் ரிசாத் பதியுதீனை சந்தித்து விளக்கியபோதே இவ்விளைஞர்களின் பெயர் விபரங்கள் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டிருந்த அறிக்கையில் காணப்படுவதையும் இவ்வமைப்பினர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இச்சந்திப்பின்போது கருத்துரைத்த அமைச்சர் பதியுதீன், கடத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பங்களுக்கு ஒருமாத காலத்திற்குள் நட்டஈடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நட்டஈட்டைப் பெறமுடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே கடத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பங்கள் உடனடியாக மீள்குடியேற்ற அதிகாரசபை உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.சப்ரினுடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ். முஸ்லிம் தொழில்சார் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கையில் ௨௦௦௦ முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி!
ராமதாஸுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்!
முஸ்லிம்கள் குறித்து P.M.K., நிறுவனர் ராமதாஸ் தவறாகப் பேசியதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலர் காயல் மகபூப் விடுத்துள்ள அறிக்கை:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்தபோது, “இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் ஐ.எஸ்.ஐ., உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும், அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது, தமிழக முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இலங்கை ராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவதைப் போல், விடுதலைப் புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பல மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் முஸ்லிம் பகுதிகளில் இரவு 12 மணிக்கு விடுதலைப் புலிகள் துப்பாக்கியுடன் புகுந்து, அங்குள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி, 24 மணி நேர அவகாசத்தில், வாழ்ந்த இடங்களை விட்டு, உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்கத் தயாராக இல்லை.
இவர்களின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு, ராமதாசைப் போன்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி பள்ளி வாசலில் இரவு தொழுகை நடந்திக்கொண்டிருந்த நிராயுதபாணியான முஸ்லிம்கள் நூற்றுக்கணக் கானவர்களை விடுதலைப் புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதை, ராமதாசைப் போன்றவர்கள் மறந்திருக்கலாம். இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்டதையே இவர்கள் மறந்துவிட்டனர்.
புலனருவ மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நள்ளிரவில் புகுந்து முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள். தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தான். இவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கக் கூடாது எனத் தடுத்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதும், இதைப் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பார்லிமென்டில் கோசல் ராம் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இவை அனைத்தையும் மறந்துவிட்டு, சொந்த நாட்டிலும், பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை ராமதாஸ் சுமத்துவது, இந்திய நாட்டின் மீது விசுவாசம் கொண்டுள்ள முஸ்லிம்களை, விரட்டத் துணியும் கொடூரச் செயல். லோக்சபாத் தேர்தலை மனதில் வைத்து இலங்கைப் பிரச்னையில் காய் நகர்த்தும் ராமதாஸ், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், மத்திய அமைச்சராக உள்ள அவரது மகனை பதவியிலிருந்து விலகச் செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.
பிரபாவின் கடைசி நிமிடங்கள்-வீடியோ
புலிகளின் தவைர் பிரபாகரன் இறந்ததை ம(று)றைத்து அது முகமூடி அல்லது மாஸ்க் என்று கதையளக்கும் புலிப்பினாமிகளின் கவனத்திற்காக.. அதிரடிக்கு கிடைத்த வீடியோ ஒன்றை (அதாவது வன்னிக்களமுனையில் 19.05.09 அன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலையில் வெட்டி மருத்துவப் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கும் காட்சி)
athirady.org
மைகள் ஜாக்சன் (மிகாயில்) மரணமானார்
இன்று 25.6.2009 மைகள் ஜாக்சன் (மிகாயில்) உடல் வலிப்பதாக அருகில் இருந்த உதவியாளரிடம் கூறினார். உடனே டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் மிகாயில்க்கு தீவிரசிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி மைகள் ஜாக்சன் (மிகாயில்) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50 இவர் இஸ்லாத்தை தலுவிகொண்டார் என்பது ஊடகதகவல் Inalilahi wa Inalilaihi Rajioon .
மூன்று வருடத்துக்குள் வடக்கில் 325,000 புதிய வீடுகள்
மூன்று வருட வேலைத்திட்டத்திற்கமைய வடமாகாணத்தில் புதிதாக 325,000 வீடுகள் அமைக்கப்படவிருக்கும் அதேநேரம், அங்கு 150,000 வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாக, வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணிக் குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் மோதல்களால் பாதிக்கப்பட்ட வடபகுதியின் பெருந்தெருக்கள், மின்சார விநியோகம், வீடுகள், நீர் விநியோகம், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன. தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கு துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏ மற்றும் பீ தர வீதிகளைப் புனரமைப்பதற்கென ஏற்கனவே 72 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் 180 நாட்களில் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மூன்று வருட வேலைத்திட்டத்தின் கீழ் 11.5பில்லியன் ரூபா செலவில் 325,000புதிய வீடுகள் அமைப்பதற்கும், 150,000வீடுகளைப் புனரமைப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் செய்துகொடுக்கப்படும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
thenee.com
வணங்காமண் கப்பலுக்கு இலங்கை அனுமதி
முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சி வெற்றி: வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த வணங்காமண் கப்பலுக்கு இலங்கை அனுமதிமுதல் – அமைச்சர் கருணாநிதி மேற் கொண்ட முயற்சியை தொடர்ந்து, இலங்கை தமிழர்களுக்காக வணங்காமண் கப்பலில் கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்களை ஏற்றுக் கொள்ள இலங்கை அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. இதற்கான உறுதிமொழியை வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவிடம் ராஜபக்சேயின் தூதர்கள் அளித்தனர்.
thenee.com
சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அப்துல் மஜித் முகமட் காலமானார்!
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அப்துல் மஜித் முகமட் நேற்றையதினம் காலமானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜேர்மனியில் இடம்பெற்ற இந்து சமுத்திர நாடுகளின் பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 24ம் திகதி சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அவர் காலமாகும்போது அவருக்கு வயது 71வயது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கைதான இலங்கையர்!
ரானில் அந்நாட்டு அரசுக்கெதிரான போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின் தேர்தல் முடிவை ஆட்சேபித்து எதிர்க்கட்சிகளால் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது பொலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையர்கள் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிராத போதிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும்போது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஈரானுக்கான இலங்கைத் தூதரகம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் 70,000 அமெரிக்கன் டொலர் நிதியுதவி !
யாழ். முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் வாக்களிக்க அனுமதி
நடைபெறவுள்ள யாழ். மாநகரசபைத் தேர்தலில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இலங்கையின் பல பகுதிகளிலும் வாழும் யாழ். முஸ்லிம்களும அவர்கள் வசிக்கும் மாவட்டங்களில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே வாக்களிக்கும் உரிமையை பாதுகாப்பதற்காக, உடனடியாக வாக்களிக்க விண்ணப்பிக்குமாறு யாழ் முஸ்லிம் தொழில்சார் அமைப்பு வேண்டிக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை, கொழும்பு, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இலங்கையின் பல பகுதிகளிலும் வாழும் யாழ் முஸ்லிம்களின் வாக்குகளைப் பதிவதில் யாழ். முஸ்லிம் தொழில்சார் அமைப்பு உதவி வருகின்றது. இது சம்பந்தமான விபரங்களை அறிவிதற்கு சகோதாரர் ஏ.சீ அமீனுடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ். முஸ்லிம் தொழில்சார் அமைப்பு வேண்டிக்கொள்கிறது. தொலைபேசி இலக்கம்- 077-3187222
கொழும்பு மாளிகாவத்தையில் பாதாள குழுவினர் கைது, ஆயுதங்கள் மீட்பு
கொழும்பு மாளிகாவத்தை அப்பிள்வத்தைப் பிரதேசத்தில் பாதாள உலகக் குழுவினர் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதானைப் பொலீசாரும் படையினரும் இணைந்து இன்று மேற்கொண்ட தேடுதலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அப்பிரதேசத்தில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
athirady.org
வெள்ளவத்தையில் மோதல், ஒருவர் குத்திக்கொலை!
கொழும்பு வெள்ளவத்தை 33ம் ஒழுங்கைப் பிரதேசத்தில் நேற்றிரவு இரண்டு தமிழ் குழுக்களிடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டதில் 24வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடையவர் செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக வெள்ளவத்தைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்த கூரான ஆயுதமொன்றையும் வெள்ளவத்தைப் பொலீசார் கைப்பற்றியுள்ளனர். காதல் பிரச்சினையே இச்சம்பவத்திற்கு காரணமென்றும் தனது தங்கையின் காதலனையே குறித்த சந்தேகநபர் குத்திக் கொன்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
athirady.org
புகலிடம் கோரி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீண்டும் அழைக்கத் திட்டம்
| சர்வதேச ரீதியாக புகலிடம் கோரி அரசியல் தஞ்சமடைந்துள்ள சகல இலங்கையர்களையும் மீண்டும் அழைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்து;ளளார். |
| அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்யும் இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க வேண்டாம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் உலக நாடுகளிடம் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது.
இலங்கையர்கள் அதிகம் தஞ்சம்கோரியுள்ள நாடுகளான அமெரிக்கா கனடா ஐரோப்பிய நாடுகள் அவுஸ்திரேலியா மற்றும் சில நாடுகளுக்கும் இது தொடர்பாக தமது தூதரகங்கள் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் வாழ முடியாது என தஞ்சம் கோரியிருந்தவர்களை திருப்பி அனுப்புமாறு வேண்டப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் |
கிலாபா- உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவது அனைவர் மீதும் கட்டாய கடமை

கிளாபத் ஏற்படுத்துவது அனைவர் மீதும் கட்டாய கடமை
இஸ்லாமிய கிலாபா ஆட்சியால் மட்டுமே முஸ்லிம்களின் நாடுகளை பாதுகாக்க முடியும். அதனை நிலைநாட்டுவது கடமையாகும். இக்கடமையை நிலைநாட்டாது முடங்கிக்கிடப்பது ஹராமாகும். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்குமான ஆட்சி ஒழுங்குதான் கிலாபா ஆகும் இதன் மூலம் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் அமுல் செய்யப்படும்.
இஸ்லாமிய தஆவா முழு உலகுக்கும் சுமந்து செல்லப்படும். இது முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய, இஸ்லாமிய நாடுகளை ஒன்றுபடுத்தக்கூடிய அரசியல் ஒழுங்காகும். இஸ்லாமிய ஷரீஆவைக் கொண்டு ஆளுகின்ற கலீஃபா ஒருவர் இருப்பது அவசியம் என நபிகள் நாயகம்(ஸல்) கட்டளையிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. “…அதிகமான கலீஃபாக்கள் காணப்படுவார்கள் நாயகமே அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?” என்றனர் சஹாபாக்கள். அதற்கு நாயகம்(ஸல்) கூறினார்கள் ‘முதலாமவருக்கு உங்கள் பைஅத் (சத்தியப்பிரமாணத்தை) கொடுங்கள்’ மேலும் கூறினார்கள் ‘இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத் கொடுக்கப்பட்டால் அவர்களுள் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்’. கிலாபா என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீண்டும் வரும் என்று செய்தி கூறிச்சென்ற ஆட்சிமுறையாகும்.
நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் ‘பிறகு ஒரு கிலாபா நபியின் வழிமுறையில் தோன்றும்’. இஸ்லாமிய கிலாபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய நீதி நிர்வாகம், பொருளாதாரம், சமூகவியல், கல்வி, வெளிநாட்டு அலுவல்கள் ஆகியவை தொடர்பான சகல இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களும் நடைமுறைபடுத்தப்படும். கிலாபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய ஜிஹாத் போராட்டம் நடைமுறைபடுத்தப்படும். இந்த ஜிஹாத் இஸ்லாத்தை முழு உலகுக்கும் சுமந்து செல்வதற்காகவும், முஸ்லிம் நிலங்களையும், உயிர், மானம், செல்வம் ஆகியவற்றையும் பாதுகாப்பதற்காகவும், மேலும் தமது ஆட்சியை ஏற்றுக்கொண்ட திம்மீக்களையும் (இஸ்லாமிய ஆட்சியில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள்) பாதுகாப்பதற்கான போராட்டமாகும். இஸ்லாமிய கிலாபா என்பது அல்லாஹ் எந்தத் தீமைகளைவிட்டும் தவிர்த்து விலகிக்கொள்ளுமாறு முஸ்லீம்களுக்கு ஏவினானோ அவற்றை தடுக்கின்ற ஆட்சியாகும்.
இது சமூகத்தில் காணப்படுகின்ற தீமையின் அடையாளங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டும். இஸ்லாமிய நன்மையை பாதுகாக்கும். சகலவிதமான வழிகேடுகள் உட்செருகல்கள், அத்துமீறல்கள் அனைத்தையும் தடுக்கும். கிலாபா, சமூகத்தின் நாலா பக்கங்களிலும் ஈமானிய பண்பாடுகளையும் போற்றத்தக்க சுத்தத்தையும், ஒளியையும், தொலைத்தொடர்பு மூலமாகவும் கல்லூரிகள், நிறுவனங்கள் மூலமாகவும் பரப்பிவிடும்.
இஸ்லாமிய ஆட்சியில் வாழும் பிரஜைகள், தமது பிள்ளைகள், தீமைகள், சீர்கேடு, ஒழுக்க வீழ்ச்சி என இழுத்துச் செல்லப்படுவார்களே என அஞ்சமாட்டார்கள். கிலாபா என்பது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிறைவேற்றும்படி கூறிய கட்டளையாகும். தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருத்தல், பிரதேசவெறி, தேசியவெறி, இனவெறி, நிறவெறி மற்றும் கோத்திற வெறிகளை விட்டும் தூரமாக இருத்தல் ஆகியவற்றையும் நிலைநாட்டும். இது ஒருசாரரின் அல்லது ஒரு துறையினரின் ஆட்சியாக இருக்காது. மாறாக இதன் பார்வை தமது பிரஜைகள் அனைவரும் ஒன்றே என்பதாகவே இருக்கும். குர்ஆனிலும் சுன்னாவிலும் காணப்படுகின்ற பலமான ஆதாரத்திற்கு ஏற்பவே இஸ்லாம் நடைமுறைபடுத்தப்படும். இது இனத்தையும் நிறத்தையும் பார்க்கின்ற ஆட்சியாக இருக்காது. அஜமியைவிட அரபிக்கு எந்த சிறப்பும் இருக்காது.
கறுப்பரைவிட வெள்ளையருக்கு எந்த சிறப்புமிருக்காது. தக்வாவைக்கொண்டே சிறப்பு கணிக்கப்படும்.ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய சட்டங்கள் சகலத்தையும் நிறைவேற்றும்படியே ஏவப்பட்டுள்ளனர். இதன் கருத்து உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமம் என்பதே. எனவே அவர்கள் அனைவரையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் நிச்சயமாக விசுவாசிகள் சகோதரர்களே! நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் விசுவாசிகள் தங்களுக்கு மத்தியில் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இருப்பதிலும் ஓர் உடலைப் போன்றவர்கள். உடலின் ஓர் உறுப்பிற்கு நோய் ஏற்பட்டாலும் ஏனைய உறுப்புகளும் உறக்கமின்மையாலும் காய்ச்சலாலும் பாதிக்கப்படும்.இஸ்லாமிய கிலாபா என்பது சகல முஸ்லிம்களுக்குமான ஆட்சியும் தேவையுமாகும். மேலும் அவர்கள் மீது கடமையுமாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பின் வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கிற முஸ்லிமாக இருக்கட்டும், சீனாவிலும் இந்தோனேசியாவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், லெபனானிலும் மொரோக்கோவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும் அனைவருமே இஸ்லாமிய சட்டங்கள் முழுவதையும் பின்பற்றுமாறு ஏவப்பட்டுள்ளனர். எனவே இஸ்லாமிய கிலாபாவை நிலைநாட்டுவதும் அவர்கள் மீது கடமையாகும்.
நாம் அனைவரும் ஒரேயொரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருப்பது அவசியமாகும். ஏகாதிபத்தியவாதிகளால் நம்மீது திணிக்கப்பட்ட நிலையில் உருவான பல நாடுகளாக நாம் பிரிந்துள்ளோம். எனவே மிக பலவீனமானவர்களாகவும் இருக்கின்றோம். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாறாக முஸ்லிம்கள் அனைவருக்குமான ஒரு ஆட்சியின் கீழ் முஸ்லிம்களின் பலமான இருப்பை ஏற்படுத்திக்கொள்ள நாம் ஆர்வத்தோடும் முழு முயற்சியோடும் செயற்படுவது அவசியமாகும். எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக எகிப்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய கிலாபா நோக்கி அழைக்கவேண்டும். அதற்காக பாடுபடவேண்டும். அவ்வாறே குவைத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் குவைத் இஸ்லாமிய ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக பாடுபடவேண்டும். இதைப்போன்றே ஏனைய அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருக்கின்ற முஸ்லிம்களும் இஸ்லாமிய கிளாபாவை நோக்கி அழைக்கவேண்டும்,
பாடுபடவேண்டும். இஸ்லாமிய கிலாபா முஸ்லிம்களை மட்டும் கவனிக்கின்ற ஓர் ஆட்சியாக இருக்காது, மாறாக முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரி, இஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலரையும் கவனிக்கிற ஆட்சியாக இருக்கும். இஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலருக்கும் பரிபூரண குடியுரிமை இருக்கும். ஷரீஆ எதிர்பார்க்கின்ற கடமைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பார்கள். நீதி, சமூக விவகாரங்கள் எதிலும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. முஸ்லிம்களைப்போன்றே முஸ்லிம் அல்லாதோரின் உடல், மானம், உடமைகள் யாவும் பாதுகாக்கப்படும். சத்தியமும் அச்சமும் ஒன்று சேரமுடியாது என ஒரு முஸ்லிமிற்கு நன்றாகத்தெரியும். அதைப்போலவே இறைவிசுவாசமும், இறைமறுப்பும் ஒன்றுசேரமுடியாது. இஸ்லாமிய கிலாபாவை நோக்கி போராடுகையில், இறைமறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கவேண்டிவரும் என்பதை முஸ்லிம் நன்கு அறிவான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவர்களுடைய விசுவாசிகளும் அங்கீகாரத்தையோ வரவேற்பையோ முதலில் பெறவில்லை. மாறாக உருவப்பட்ட வாள்களையும் கடும் கோபப்பட்ட உள்ளங்களையுமே சந்தித்தனர். மிகப்பெரிய இஸ்லாமியப் போராட்டங்களே நிகழ்ந்தன. ஆனால் அவற்றில் இஸ்லாத்திற்கே வெற்றி கிட்டின. இதுவே நம்மை நோக்கி அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்ற சத்தியமாக இருக்கிறது.
nermai
பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மூன்று இளைஞர்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டன!
வவுனியா நெலுக்குளம் மயானத்தில் பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்று இளைஞர்களின் சடலங்களும் அவர்களின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2மணியளவில் பொலீசார் இப்பகுதியில் பதுங்கயிருந்தபோது சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்களையும் பொலீசார் நிற்குமாறு கூறவே அவர்கள் சைக்கிள்களை கீழே போட்டுவிட்டு தப்பியோடும்போது துப்பாக்கிப் பிரயொகம் செய்யப்பட்டதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். வவுனியா ஆஸ்பத்திரி சவச்சாலையில் மூன்று சடலங்களையும் உறவினர்கள் அடையாளம் காட்டியதையடுத்து அவற்றை உறவினர்களிடமட் ஒப்படைக்குமாறு மரண விசாரணை நடத்திய வவுனியா நீதவான் பொலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இம்மூவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்களாவர்.
athirady.org
“நாடு கடந்த அரசாங்கம்” என்றால் என்ன?
|
“நாடு கடந்த அரசாங்கம்” என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. “நாடு கடந்த அரசாங்கம்” என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும், அந்த நாட்டின் தலைவர் யார்? என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. எனவே, நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக ஆராவதை விடுத்து பொதுவாக “நாடு கடந்த அரசு’ என்றால் என்னவென்பதை பார்ப்போம். இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரஷ்யன் தேசிய குடியரசு காணப்படுகின்றது. நாடு கடந்த அரசாங்கம் என்பது அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர் சொந்த நாட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசொன்றை நிறுவுவதாகும். காலப்போக்கில் இந்த அரசாங்கமானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று ஆட்சி அதிகாரங்களை மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவதே இந்த நாடு கடந்த அரசாங்கமாகும். சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தை பிரயோகிப்பது, சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவது, இன அழிப்பு செவது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை,சிறுவர்களை கடத்துவது போன்ற கொடூரங்களும் குறிப்பிட்ட இனத்தின் அரசியல் தலைவர்களை புறந்தள்ளல் போன்ற நிகழ்வுகளும் நாடு கடந்த அரசொன்றை நிறுவ சர்வதேச சட்ட மரபு நெறிகளில் இடம் வழங்குகின்றன. இரண்டாம் உலகப் போரில் பல ஐரோப்பிய நாடுகளை ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிப்படைகள் கைப்பற்றியதனால் பல ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இவ்வாறான நாடு கடந்த அரசாங் கத்தை நடத்தி வந்தனர். இதனால் அவர்களின் தேசியம் பாதுகாக்கப்பட்டது. 1920ஆம் ஆண்டில் பெலாரஷ்யன் என்ற அமைப்பு தனது நாடு பெலாரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை நாடுகடந்த அரசாங்கமாகவே இயங்கிவருகின்றது. இதேபோன்று திபெத்தை சீன அரசு ஆக்கிரமிப்பு செதபோது அந்நாட்டின் ஆன்மிகத் தலைவர் தலாலாமா இந்தியா சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகின்றார். உலகில் இன்றுவரை 11 ற்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அப்காஷியா சுயாட்சிக் குடியரசு (1993), பெலாரஷ்யன் தேசிய குடியரசு (1920), கபின்டா குடியரசு (1975), செச்சென் குடியரசு (2000), எதியோப்பியா அரச சபை (1993), ஈரான் ஏகாதிபத்திய அரசு (1979), லாவோ ஏகாதிபத்திய அரசு (1975), சகாராவி அரபு ஜனநாயகக் குடியரசு (1976), சேர்பியன் கரஜினா குடியரசு (2005), மலுகு செலாற்றன் குடியரசு (1950), மத்திய திபெத்திய நிர்வாகம் (1959) போன்றவை நாடுகடந்த அரசாங்கங்களாக செயற்படுகின்றன. இந்த நாடு கடந்த அரசாங்கங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடுகளாக அப்காஷியா, பெலரெஸ், அங்கோலா, ரஷ்யா, எதியோப்பியா, ஈரான், லாவோ, மொறாக்கோ, குரோஷியா, இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளாக, சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது, தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுப்பது, தேசியத்தின் சட்டமுறைகளை பாதுகாப்பது, ஒரு தேசிய இராணுவத்தை பாதுகாப்பது அல்லது கட்டி எழுப்புவது, இராஜதந்திர ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்தல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை உருவாக்குதல், தேர்தல் நடத்துதல் போன்றவை உள்ளன. நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைக்க ஏதாவது ஒரு வெளிநாட்டின் அங்கீகாரம், அல்லது அனுமதி தேவை. அவ்வாறு கிடைக்குமிடத்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு பாதிப்போ இடையூறுகளோ ஏற்படாதவிடத்து நாடு கடந்த அரசாங்கமொன்றை அந்த நாட்டில் நிறுவ முடியும். இவ்வாறு வெளிநாடுகளில் அமைக்கப்படும் நாடு கடந்த அரசாங்கமொன்றினால் தமது அரசின் தூதுவர்களை நியமிக்க முடியும். வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒரு நாட்டு அரசாங்கம் என்ற தகுதியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடமுடியும். ஒரு நாட்டுக்குரிய சகல அதிகாரங்கள், நடைமுறைகளும் இந்த நாடு கடந்த அரசாங்கங்களுக்கும் உண்டு. பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமது சமுதாயத்தினை அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டு ரீதியில் பலப்படுத்தவும் தமது சொந்தமண்ணில் அரசுரிமையை பெறுவதற்கும் சர்வதேச சவால்களை அதே ரீதியில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கம் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இதேவேளை ஒரு நாடு கடந்த அரசாங்கமானது சிறப்பாக செயற்பட ஒரு நாட்டின் அனுமதி அல்லது அங்கீகாரம் தேவை. அனுமதி அல்லது அங்கீகாரம் தரும் நாடு சில வேளைகளில் அவற்றை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் அதிகாரம் இழக்கப்படக் கூடும். இவ்வாறானதொரு அரசாங்கத்தையே அமைக்கப் போவதாக தற்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரெனக் கூறப்படும் கே.பத்மநாதன் அறிவித்துள்ளதுடன் நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்றையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவிருந்த விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்தினதும் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும் பின்னர் 1985 ஆம் ஆண்டில் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும் 2003 ஆம் ஆண்டில் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப் பகிர்வின் தளமாக அமைந்துள்ளதுமாகிய தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு, கிழக்கு தமிழரின் தாயக நிலம், ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை, ஈழத்தமிழரின் அரசியல் அபிலாஷைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ்மக்களையும் ஓரணியில் ஒன்றிணைப்பதே இந்த “நாடு கடந்த அரசாங்கம்’ என்ற அறிவிப்பின் நோக்கமாகவுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கமோ ” இது ஒரு கற்பனை’யென்றும் இதனை கற்பனையில் வைத்தே தாம் அழித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளது. அத்துடன் சகலநாடுகளிலுமுள்ள தமது வெளிநாட்டுத் தூதுவர்களை இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதுடன் இத்திட்டத்தை முறியடிக்க சகலவித இராஜதந்திர நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. |
முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைக்க எளிய வழி!
ஒரு முஸ்லிம் நான்கு பெண்கள் வரை திருமணம் புரிய இஸ்லாம் அனுமதிக்கின்றது. தங்களது மதம் கொடுக்கும் அனுமதியை அப்படியே பின்பற்றும் இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நான்கு பெண்களை மணம் முடித்து இஷ்டத்திற்கு குழந்தைகளைப் பெற்றுப் போடுகின்றனர். இதனால் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வருடம் தோறும் மிக அதிக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இதே நிலை நீடித்தால் இன்னும் ஒருசில வருடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக ஆகி, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இந்தியா இஸ்லாமிய நாடாக மாறி விட்டால், இஸ்லாமிய நாட்டில் காஃபிர்கள் எவருமே வாழ முடியாது. ஏனெனில், இஸ்லாம் “காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லக் கட்டளை இடுகின்றது”.
அவ்வாறு ஒரு நிலை நிகழாமல் இருக்க வேண்டுமெனில், இந்தியாவில் முஸ்லிம்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழி?
இதோ அதற்குரிய எளிய வழி!
வந்தேறிப் பார்ப்பனப் பன்னாடைகளில் உள்ள இழி மிருகங்கள் சிலர் முஸ்லிம்களைக் குறித்தும், முஸ்லிம்களின் வளர்ச்சியைக் குறித்தும் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளை நம்பி, அந்தப் பன்னாடைகளால் உருவாக்கி விடப்பட்டுள்ள மூளையற்ற காட்டுமிராண்டி சங்க் கூட்டம் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு செய்யும் தெய்வீகப் பணியினை மேலே கண்டிருப்பீர்கள்.
ஆனந்தமாக உள்ளது. பார்க்கப்பார்க்க ஆனந்தமாக உள்ளது.
மேலும் மேலும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. அவ்வளவுச் சிறப்பாகத் தங்களுக்கு இடப்பட்டப் பணியினைக் காட்டுமிராண்டிக் கூட்டம் நிறைவேற்றிக் கொண்டு வருகிறது.
பிஞ்சுக் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் எரித்து கரிக்கட்டையாக்கியிருக்கும் மிருகத்தை விடக் கேவலமான இழி ஜந்துக்கள், ஜாட்டான்கள் அனைத்து வித பாதுகாப்பு மரியாதைகளுடன் மக்கள் மத்தியில் தெனாவெட்டாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். இருக்கட்டும்.
ஆனால், ஒன்று மட்டும் இந்த காட்டுமிராண்டிக் கூட்டம் நினைவில் வைக்க வேண்டும். எப்பொழுதானாலும் தான் செய்யும் காரியத்திற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். எப்படிப்பட்டப் பாதுகாப்புடன் எந்த மூலையில் போய் ஒழிந்துக் கொண்டாலும்…. செய்த வினைகளுக்குப் பலன் வந்தடைந்தே தீரும்.
எரியும் மனங்கள் இங்கு எண்ணிலடங்காதவை இன்னும் உள. இந்தியாவிலிருந்து கடைசி முஸ்லிம் துடைத்தெறியப்படும் வரை(மீனாட்சி புரங்கள் இருக்கும் வரை அந்த எண்ணம் பலிக்கப்போவதில்லை), இந்த ஈனச்செயல்களை செய்தக் காட்டுமிராண்டிகள் நிம்மதியாக வாழலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். அந்த மனங்களின் தீச்சுவாலை இறுதிவரை பற்றி எரிந்து கொண்டே தான் இருக்கும் – பரிகாரம் காணப்படும் வரை!.
முஸ்லிம்களிடம் இல்லாத ஆயுதங்களை தேடும் தமிழ் இணையத்தளம்
முஸ்லிம்களிடம் இல்லாத ஆயுதங்களை தேடும் தமிழ் இணையத்தளம் Ilakku.com கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைவதற்கு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளாதாகவும். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து குறித்த குழுக்கள் ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றாதாக. பொய்யான பரப்புரைகளை தெரிவிக்கிறது இவ்வாறு கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை களைவதற்கு பொது மன்னிப்பு காலமொன்றை அறிவிக்க பாதுகாப்பு தரப்பு தீர்மானித்துள்ளதாகவும். பொய்யான பரப்புரைகளை தெரிவிக்கிறது, மட்டக்கலப்பு ஏறாவூர் காத்தான்குடி அம்பாறை கல்முனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு குறித்த ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கும் இவர்கள் . காத்தான்குடி பிரதேசத்தில் இவ்வாறு இயங்கிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர் இவர்கள் பணத்துக்காக ஆயுதம் விற்பவர்களை முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் என வர்ணிப்பது கண்டிக்கதக்கதாகும்.
Ilakku.com தெரிவித்த தகவல்
கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைய விசேட திட்டம்
கிழக்கில் தற்போது இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைவதற்கு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து குறித்த குழுக்கள் ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை களைவதற்கு பொது மன்னிப்பு காலமொன்றை அறிவிக்க பாதுகாப்பு தரப்பு தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் காத்தான்குடி அம்பாறை கல்முனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு குறித்த ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காத்தான்குடி பிரதேசத்தில் இவ்வாறு இயங்கிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
புதிய மாகாணசபை உறுப்பினராக காத்தான்குடி நகரசபைத் தலைவர் யூ.எல்.எம்.முபீன் தெரிவு!!
கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக காத்தான்குடி நகரசபைத் தலைவர் யூ.எல்.எம்.முபீன் தெரிவாகியுள்ளார். எதிர்வரும் செவ்வாயன்று கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக இவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். நடைபெற்ற முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இவர் போட்டியிட்டிருந்தார். மாகாணசபைக்கு தெரிவாகியிருந்த வெள்ளைத்தம்பி அமீர்தீன் தனது பதவியை இராஜினாமா செய்த காரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இவர் நியமிக்கப்படவுள்ளார். இதற்காக காத்தான்குடி நகரசபைத் தலைவர் பதவியை முபீன் இராஜினாமா செய்யவுள்ளார்.
நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல், ஒருவர் கொலை!
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் நேற்றிரவு 9மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது பலத்த காயமடைந்த குறித்த நபர் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.45அளவில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் நிந்தவூர் ஒன்பதாம் பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 56வயதுடைய எம்.மஹ்முத் ஆவார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
athirady.org
நாரெஹென்பிட்டி, புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசங்களிலிருந்து சடலங்கள் மீட்பு
கொழும்பு நாரெஹென்பிட்டி புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசங்களிலிருந்து சடலங்கள் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்தந்த பிரதேச பொலீசார் தெரிவித்துள்ளனர். நாரெஹென்பிட்டியிலுள்ள ஆர்.எம்.பி எனப்படும் இலங்கை மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்கு முன்னாலுள்ள வாய்க்காலுக்குள்ளிருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை புத்தளம் வண்ணாத்திவில்லு காட்டுப்பகுதியில் வைத்து இன்றுகாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக புத்தளம் பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்தந்த பிரதேச பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய முஸ்லிம்களின் வேன்டுகோல்
இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க!
இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க!
இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகத்தில் கேட்கச் செய்ய ஆவன செய்து தருமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தொடர்புகொண்டு கோரிக்கை முன்வைக்குமாறு பொதுமக்களுக்கு அதிரை எக்ஸ்ப்ரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து,
அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த பொதுமக்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! இன்று நம் வீடுகளையும், நம் சிந்தனையையும் விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியின் படையெடுப்பு நடப்பதற்கு முந்தைய காலகட்டமது.
அதாவது 1980களின் தொடக்க வருடங்கள் வரை நம் இல்லங்களையும், இதயங்களையும் நிறைத்திருந்தது. இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை.
இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் முஸ்லிம் நிகழ்ச்சியில் அல்குர்ஆன் முரத்தல், மணிமொழிகள், குத்பா உரைகள், அஸ்மாஉல் ஹுஸ்னா, இஸ்லாமிய கீதங்கள், அறிவுக்களஞ்சியம், வரலாற்றில் ஓர் குறிப்பேடு, நாடகம், மாதர் மஜ்லிஸ்… என இன்னபிற சீரிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி நம் சிந்தையை சீர்படுத்தியது இலங்கை வானொலி.
அத்துடன் நில்லாது, நோன்பு தொடக்கம், இரு பெருநாட்கள் பற்றிய பிறை அறிவிப்புகளுக்கு நாம் முற்றிலும் இலங்கை வானொலியைச் சார்ந்திருந்ததை யாராலும் மறக்கவியலாது. ரமழானில் ஸஹர் நேரங்களில் நள்ளிரவு 3 மணி முதல் ஸுப்ஹு பாங்கு சொல்லும் வரை சீரிய மார்க்கக் கருத்துக்களை ஸஹர் உணவோடு சேர்த்து நமக்கு ஊட்டிய இலங்கை வானொலிக்கு நாம் பல வகைகளில் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து – குறிப்பாக அதிராம்பட்டினம், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளின் மார்க்கப் பெருந்தகைகள் இலங்கை தீவிற்கு வருகை புரியும்போதெல்லாம் அவர்களை தமது ஒலிப்பதிவுக் கூடத்திற்கு அழைத்து, அந்த உலமாப் பெருமக்களின் மார்க்க அறவுரைகளை இந்திய – இலங்கையின் வான்பரப்புகளில் தவழ விட்ட இலங்கை வானொலியின் தஃவா பரப்புரை பாரியது.
இனக்கலவரமும், தொலைக்காட்சி வருகையும்
1983ஆம் ஆண்டு, இலங்கை தீவில் வெடித்துக் கிளம்பிய இனக்கலவரம்ளூ இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை தமிழகத்திற்குக் கிட்டி வந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. இலங்கை வானொலியின் தமிழகத்திற்கான ஒலிபரப்புக் கோபுரங்கள் அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தகர்க்கப்பட்டுவிட்டது. இலங்கை வானொலி இல்லாமற்போன வெற்றிடத்தை இங்குள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள் வேக
வேகமாக வந்து நிரப்பிவிட்டன.
தகவல் தொழில்நுட்பப் பாய்ச்சலில், தொலைக்காட்சியின் இருப்பைத் தவிர்க்க முடியாதெனினும், அதனால் நம் சமூக, கூட்டு, மார்க்க வாழ்வில் ஏற்பட்ட உடைவுகளையும், சிதறல்களையும் மறுக்கவியலாது. அன்று மஃரிபைத் தொழுது, அதே முஸல்லாவில் இஷாவையும் நிறைவு செய்த நம் பெண்மணிகள், இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை துவங்கும் வரையிலும் முஸல்லாவிலேயே இபாதத்துகளைத்
தொடர்ந்திருந்தனர்.
ஆனால் இன்றோ தொலைக்காட்சியின் குறு – நெடுந்தொடர்கள் தங்களின் தொழுகைகளையும், நேரத்தையும், சிந்தனையையும், சிரத்தையையும் தொலைத்தவர்களாக நாம் மாறிவிட்டோம். ஒருதலைக்காதல், பொருந்தாக் காதல், கூடாநட்பு, சதிபதி துரோகம், நுகர்வியம் என தாறுமாறாகத் தாக்குதல்களைத் தொடுத்து, ஒழுக்கமான வாழ்வியல் ஒழுங்குகளை இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் குலைத்துப் போட்டுவிட்டன.
அத்துடன், வீடு வரை தேடி வந்த மார்க்க வழிகாட்டுதல்களுக்கும் இன்று பெரும் வறட்சி ஏற்பட்டு விட்டது.
இன்று நாம் காணும் – கேள்வியுறும் – அனுபவிக்கும் தலாக், ஓடிப்போதல்… என்பன போன்ற ஒழுக்கக் கேடுகளுக்கான வித்துக்களைத் தூவியதில் தொலைக்காட்சிக்கு பெரும்பங்குண்டு.
இலங்கையின் போர் ஓய்வும், வானொலியின் மீள்வருகையும்
இன்று இலங்கையில் இனப்போர் ஓய்ந்து அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், இலங்கை வானொலி கடந்த ஒரு வருட காலமாக ஷஷகொழும்பு சர்வதேச ஒலிபரப்பைஷஷ காலை 7 மணி முதல் நண்பகல் வரை தமிழகத்திற்கென ஒலிபரப்பி வருகிறது. அந்தத் தமிழ்ச்சேவையில் திரைப்படப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பாகின்றன.. ஆனால் இந்த ஒலிபரப்பிற்கும் தமிழகத்தில் நிறைய முஸ்லிமல்லாத வானொலி நேயர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இலங்கை வானொலிக்கு நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும். காலை 8 முதல் 10.30 மணிளூ இரவு 7:30 முதல் 9 மணி வரை ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை தமிழக மக்களும் கேட்கும்படியாக இலங்கை வானொலி தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென நாம் கோர வேண்டும்.
இறையருளால் இவ்வொலிபரப்புச் சேவை நம் பகுதிக்கு விரைவில் கிடைக்கும்பட்சத்தில், ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கொண்ட தொடர்புகளுக்காக இலங்கை முகவரிக்குப் பகரமாக இந்தியாவில், சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரக முகவரிக்கு தரைவழி அஞ்சல் அனுப்ப வசதி செய்து தருமாரும் நாம் கோர வேண்டும்.
இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவைகளினால் நமக்குக் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த பயனை நாம் பார்ப்போம். அப்பயன்களுடன் கூடவே இன்னும் சில பயன்கள் உண்டு. அவை என்னவெனில்,
(1) இலங்கை வானொலியின் தமிழ் தேசிய ஒலிபரப்பை நிறைய முஸ்லிமல்லாத அன்பர்கள் கேட்கின்றனர். அதே நேயர்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகளையும் கேட்பதினூடாக தஃவா எனப்படும் மார்க்கப் பரப்புரைப் பணி மிக எளிதாக நடந்தேறி விடும்.
(2) தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு நாம் தனியே நேரம் ஒதுக்கி, வேலையை ஒதுக்கி, அப்பெட்டி முன்னே முடங்கிக் கிடக்க வேண்டும். ஆனால் வானொலிக்கோ அத்தகைய சிரமம் ஒன்றுமில்லை. நமது அன்றாடப் பணிகளைச் செய்துகொண்டே மார்க்க நெறி உரைகளை நம் வீட்டிலுள்ள அனைவருமே கேட்க முடியும்.
இதற்காக நாம் செய்ய வேண்டியது…
இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை மூலம் நாம் பெற்ற பலன்களை விவரித்து, நன்றி தெரிவித்து, அந்த ஒலிபரப்பின் தற்காலத் தேவை குறித்து சுருக்கமாகவோ, விரிவாகவோ கீழ்க்கண்ட முகவரிகளுக்கு மின்னஞ்சல், தரைவழி அஞ்சல் (ளரசகயஉந அயடை) மூலம் கோரிக்கைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் அனுப்பலாம். கோரிக்கைகளை அனுப்பியவர்களும், அதற்கான மறுமொழி கிடைக்கப் பெற்றவர்களும் மறவாமல் நமது
காயல் இணையதளத்திற்கு அதன் படியை (நகலை) மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
முகவரிகள்:
(1) Deputy High Commissioner,
Deputy High Commission of Srilanka,
196, T.T.K. Road,
Alwarpet,
Chennai – 600 018
Phone: 00-91-44-24987896, 24987612
Email:
sldehico@md3.vsnl.net.in
sldehico@hathway.com
(2)
The Director,
Muslim Services,
SLBC, Torrindton Square,
Post Box No.: 574,
Colombo – 07,
Srilanka.
Mobile : 00-94-777304033
Office Phone Numbers:
00-94-11-2692529, 2675976
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், முஸ்லிம், ஈழம் பெயர்களுடைய கட்சிகளுக்கு விரைவில் தடை!!
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களையுடைய அரசியல் கட்சிகளுக்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பிட்ட ஓர் சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதன்படி குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பட்டு வருவதாக சுட்டிக் காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பிரகாரம் தமிழ், முஸ்லிம், ஈழம் போன்ற பதங்களை தங்களது கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்ட கட்சிகள் பெயர்களை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
athirady.org
பிரபாகரன் பயன்படுத்திய டயரி
பிரபாகரன் 2008ம் ஆண்டு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் டயரியொன்று கொழும்பு குணசிங்கபுர பஸ் நிலையத்தில் வைத்து பஸ் ஒன்றுக்குள் இருந்த பயணப் பையிலிருந்து நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது முஸ்லிம் படைவீரர் ஒருவரின் பயணப்பை என்றும் அவர் வன்னிப் பகுதியிலிருந்து விடுமுறையாக கொழும்பு வந்த நிலையில் பையை தவறவிட்டு சென்றிருந்தாரென்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பைக்குள் இருந்த டயரியில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது மேற்படி முஸ்லிம் படைவீரரே பையை தவறவிட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அவர் புதுமாந்தளன் பகுதியில் இறுதி யுத்தத்தின் போது புலிகளின் பங்கருக்குள் இருந்து கிடைத்த டயரி என்றும், அது பிரபாகரனுடையதென சந்தேகித்தே தான் அதனை எடுத்து வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். பிரபாகரனின் கையெழுத்திலேயே எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த டயரியின் முன்பக்கத்தில் பிரபாகரனின் பெயர், விலாசம் உள்ளிட்ட சகல விபரங்களும் எழுதப்பட்டுள்ளது. கடந்த வருட புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள், கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வின்போது நடத்தவிருந்த தாக்குதல் திட்டம் போன்றன டயரியில் எழுதப்பட்டுள்ளன.
athirady.org
7 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது
| விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 7 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது |
| இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு இராணுவ மேஜர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையற்றிய இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த இராணுவ உயரதிகாரிகள் தொடர்பில் விரிவான இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக அவர்ளது விபரங்களை வெளியிட முடியாதென பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். |
கசிப்பு விற்பகைகு எதிர்ப்பு தெரிவித்தமையால் நஞ்சூட்டப்பட்ட பிக்கு சிகிச்சை பலனின்றி பலி!!
கசிப்பு விற்பகைகு எதிர்ப்பு தெரிவித்தமையால் நஞ்சூட்டப்பட்ட பிக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். எலஹா அத்தரகல்லேவைச் சேர்ந்த சீலனந்த (வயசு23) என்ற தேரரே இவ்வாறு உயிரிழந்தவராவர். இப்பகுதியில் கசிப்பு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த அவர் அது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்திருந்தார். இந்நிலையில் விகாரையில் அவருக்கு தானமாக வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதன் பின்னர் அவர் சுகயீனமுற்றார். தேரர் சாப்பிட்ட உணவில் நஞ்சு கலக்கப்பட்டிருந்தமை மருத்துவர்களால் உறுதி செய்யப் பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தேரருக்கு கடந்த ஒரு வருடமாக சிகிட்சை அளிக்கப்பட்டு வந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
athirady.org
மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியில் அமைந்துள்ள மைலம்பாவெளி, மன்னம்பிட்டி சோதனைச் சாவடிகள் தவிர்ந்த அனைத்து சாவடிகளும் அகற்றப்படும்!!
மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியில் அமைந்துள்ள மைலம்பாவெளி, மன்னம்பிட்டி சோதனைச் சாவடிகள் மாத்திரம் சில காலத்திற்கு இயங்கும் என்றும் அவை தவிர அனைத்து சோதனைச் சாவடிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இப்பகுதியிலுள்ள பொலீஸ் மற்றும் இராணுவ விசேட அதிரடிப்படை சோதனை நிலையங்களை மூடுவதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தற்போதைய சுமுகமான சூழ்நிலைகளினால் சகல சோதனை மையங்களும் முற்றாக அகற்றப்படவுள்ளன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு மன்னம்பிட்டி மற்றும் மைலம்பாவெளி சோதனைச் சாவடிகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நிலைமைகளைப் பொறுத்து அவைகளும் அகற்றப்படவுள்ளன.
athirady.org
இவ்வருட முடிவுக்குள் வடமாகாணத்தில் 500வீடுகள் நிர்மாணிக்க திட்டம்!!
வடக்கு வசந்தம் திட்டத்தின்கீழ் இந்த வருட முடிவுக்குள் வட மாகாணத்தில் 500வீடுகள் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதிலக்க நேற்று தெரிவித்துள்ளார். இதற்காக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையுடன் இணைந்ததாக வீடமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் முதலில் மன்னார் மாவட்டத்தில் 100வீடுகள் நிர்மாணிக்கப் படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும் நடவடிக்கையோடு இணைந்ததாக வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கைகளின்போது மக்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்படவுள்ளதோடு வெளிநாட்டு உதவியுடன் நிரந்தர வீடுகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மோதல் காரணமாக சேதமான வீடுகளை திருத்தியமைக்கவும் வீடமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதுதவிர மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக செயலாளர் கூறினார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த ம்ககளை மீள்குடியேற்றுவது தொடர்பான 180நாள் திட்டத்தின்கீழ் மன்னாரில் 100வீடுகளும் வவுனியாவில் 175வீடுகளும் யாழ்ப்பாணத்தில் 175வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதுதவிர தொடர்மாடி வீடமைப்பு திட்டங்களும் வடக்கில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகள் கடனுதவி அடிப்படையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
athirady.org
துபையில் விற்பனையாகும் ஹிஜாப்களில் புற்று நோய் இரசாயனங்கள்!
துபையில் விற்பனையாகும் ஹிஜாப்கள் (கேன்ஸர்) புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இது UAE யின் கல்ஃப் நியூஸ் செய்தியில் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய உடையான ஹிஜாப் (Abayas and Shailahs) முஸ்லிம் பெண்கள் பரவலாக அணியக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் துபையின் மத்திய ஆய்வுக்கூடமான (DCL) ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இதில் ஹிஜாப் தயாரிக்கப் பயன்படுத்தப் படும் துணியில் நிறத்தினைத் தருவதற்காக பயன்படுத்தப் படும் இரசாயனப் பொருட்களில் கார்ஸினோஜென்ஸ் (carcinogens) என்ற நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயனம் கலக்கப் பட்டிருப்பதும் அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக உலோகக் கலவைகள் இவ்வகை நெசவில் பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
DCL இல் பணிபுரியும் ஸோஃபியா காஸிம் என்ற பெண் ஆய்வாளர் கல்ஃப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள செய்தியில் இந்த திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வினைத் தொடர்ந்து துபையில் உள்ள பெரும்பாலான ஹிஜாப் நிறுவனங்கள் தயாரிக்கும் உடைகள் கார்ஸினோஜென்ஸ் தனிமங்கள் உள்ளனவா என்ற ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றன. இத்தகைய ஹிஜாபை அணிவதால் உடலில் ஏற்படும் இராசயப் மாற்றங்கள் மற்றும் பக்க விளைவுகளை ஆய்வு செய்தபின் இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
இச் செய்தி கண்டு ஹிஜாப் அணியும் பெண்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது DCL. சந்தையில் விற்கும் அனைத்து ஹிஜாப்களிலும் இத்தகைய இரசாயனங்கள் இல்லை என்றும் பரிசோதனையில் சிக்கிய நிறுவனங்களின் அனைத்துத் தயாரிப்புகளும் உடனடியாக அகற்றப் பட்டுள்ளது என்றும் DCL தெளிவுபடுத்தியுள்ளது.
புற்றுநோயாளிகளுக்கான சங்கத்தில் (President of the Friends of Cancer Patients Society) முக்கியப் பொறுப்பினை வகிக்கும் டாக்டர் ஸா-ஸன் அல் மஹ்தி, இவ்விஷயத்தில் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆச்சரியமான விஷயம் என்னவெனில் நாம் எத்தகைய உணவை உண்ண வேண்டும், எத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புகை பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களைக் கைவிட வேண்டும் என்று தினமும் அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் எத்தகைய உடையை அணியவேண்டும் என்பதை மறந்து விட்டோம் என்றார்.
இத்தகைய ஹிஜாபினைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பது இன்னும் வெளியாக வில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் துணிகளில் பயன்படுத்தும் இத்தகைய இரசாயனப் பொருட்கள் மீதான தனிச் சட்டம் ஏதுமில்லாததால் இதற்கான உடனடி தீர்வை அறிவிக்க அரசினால் இயலவில்லை என்றார் துபை ஹாஸ்பிடல் நிறுவனத்தில் oncology துறைத் தலைவரான டாக்டர் ஃபரீத் கலீஃபா.
செயற்கை நிறமிகள் ஏற்படுத்தும் ஆபத்து என்ன?
நெசவின் போது பயன்படுத்தப்படும் சில செயற்கை நிறமிகள் ஆண் விதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்று நோய்களையும் மற்றும் சில நிறமிகள் பித்தப்பை மற்றும் சீறுநீரகப் பை போன்றவற்றில் புற்று நோயை உருவாக்கவல்லவை என்று அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
நெசவுப் பொருட்களில் சேர்க்கும் நிறமிகளிலும் இராசயப் பொருட்களிலும் உள்ள carcinogenic ஆபத்துகளைப் பற்றி வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (WHO) பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை:
Direct Blue 6, Direct Black 38 மற்றும் Direct Brown 95 போன்ற பென்சீன் (benzidine) ஐ மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப் படும் நிறமிகள் அனைத்துமே ஆபத்தானவை ஆகும். முக்கியமான விஷயம் என்னவெனில் இவை எல்லாம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்ட ஒன்றாகும். WHO வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறமிகள் மற்றும் அவற்றின் குணாதிசியங்கள் இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
carcinogens என்ற நச்சுப் பொருள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் விழிப்புணர்வு எந்த அளவிற்கு உள்ளது இவற்றைக் கண்டுபிடித்தலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் என்ன? என்பதே எஞ்சி நிற்கும் கேள்வியாக உள்ளது.
islamicdress.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!
2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை ‘முஸ்லிம் தீவிரவாத’மாகத் திசை திருப்பி, 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட மோடியும் அவனது கொலைவெறிக் கூட்டமும் இன்றுவரை வெகு சுதந்திரமாக பவனி வரும் நாடு, நம் நாடு.
கடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின்போது அங்கு முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் ஒட்டுத் தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டாலும் பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு செயல்படுவதாகக் காட்டுக் கூச்சல் போடும் பேச்சுரிமைச் சுதந்திரம் மிளிரும் நாடு, நம் நாடு.
கடந்த 2007 ஜனவரி மாதம் 24ஆம் நாளிரவில் தென்காசி RSS அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாக்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலையக் குண்டு வெடிப்பில் ஒரு வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்றாலும், செய்வதையும் செய்துவிட்டு, “இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம்; அவர்களைக் கைது செய்ய வெண்டும்” என்று அறிக்கைகளை அள்ளி விடுவதற்கும் அவற்றைப் படித்துப் பார்க்காமலே பதிப்பதற்கும் பரபரப்புப் பத்திரிகைகள் நிறைந்த கருத்துச் சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் நாடு, நம் நாடு.
கேரளத்திலிருந்து வெளியாகும் “தேஜஸ்” என்ற தினசரியில், “நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே” என்று பிரபல தலித் சிந்தனைவாதியும் “தலித் வாய்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T இராஜசேகர் உரக்க உண்மையைப் போட்டுடைத்த போதிலும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற இன்னபிற புண்ணாக்கு வாதங்களெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் கடமைகளாக நிறைவேற்றப் படுவதுபோல் உலகமுழுதும் உருவாக்கப்பட்டு வரும் மாயையை ஒழித்துக் கட்டுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலொன்றாக, இந்திய முஸ்லிம் அறிஞர்களும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவினரும் இணைந்து ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்’ Movement Against Terrorism (MAT) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கின்றனர்.
“முஸ்லிம்களுக்குக் கல்வியூட்டும் கடமையோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதை ஊடகங்களுக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் உரியவகையில் புரிய வைப்பதைக் கடமையாகக் கையிலெடுத்துள்ளோம்” என்று கூறுகிறார் ப.எ.இ.யின் ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவின் செயற்குழு உறுப்பினருமான காலித் ரஷீத் ஃப்ராங்கி மஹல்லீ.
“அண்மையில் நடைபெற்ற ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியவரையும் அதைப்போன்ற பெயர் தாங்கிகளையும் எதிர்த்துப் போராடி முறியடிப்போம்” என்றும் அவர் சூளுரைத்தார்.
மேலும், கடந்த ஃபிப்ரவரி 2ஆம் நாள் லக்நவ்வில் இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் குழுமிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டு, இப்போது செயலுக்கு வருவதாகவும் IANS க்கு அளித்த தொலைபேசிப் பேட்டியின்போது ஆயிஷ்பக் ஈத்காவின் துணை இமாமான மஹல்லீ கூறினார்.
“நாட்டில் நிகழ்த்தப் படும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் சுமத்தி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்” என்று கூறிய மஹல்லீ, நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்’ பற்றி, ஒவ்வொரு பள்ளியின் வெள்ளிமேடைகளிலும் அறிமுகப் படுத்தி, எங்கள் சமுதாயத்தவரைத் தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்ல விடாது தடுத்து, வெற்றியின் இலக்கை நிச்சயம் அடைவோம்” என்று உறுதியோடு கூறும் மஹல்லீயின் அவாவும் இலட்சியமும்தான் கோடானு கோடி இந்திய முஸ்லிம்களின் அவாவும் இலட்சியமுமாகும்.
நாட்டின் அமைதியே நமது அவா!
muslimpage.blogspot.com
தெளிவான தீவிரவாதி…!
இருபதாம் நூற்றாண்டிற்கு மேற்குலகம் கண்டு பிடித்தளித்து, விசித்திரமாகத் தமிழ்ப் படுத்தப் பட்ட சொற்கள்தாம் Terrorism/Terrorist முறையே தீவிரவாதம்/தீவிரவாதி!
தேர்தலில் “தீவிர”ப் பிரச்சாரம் செய்பவர், அரசியல்வாதி.
என்கவுண்டரில் கொல்லப் பட்ட வீரப்பனை இரு மாமாங்கங்களாகத் “தீவிர”மாகத் தேடியவர்கள், காவல் துறையினர்.
நடிக-நடிகையரின் வீட்டில் கருப்புப் பணத்தைத் “தீவிர” வேட்டையாடுபவர்கள், வருமான வரிச் சோதனையாளர்கள்.
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றத் “தீவிர” முயற்சியில், மத்திய அரசு.
Terrorism, Terrorist ஆகிய ஆங்கிலச் சொற்களை முறையே தீவிரவாதம், தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தினால் மேற்காணும் அரசியல்வாதி, காவல்துறையினர், வருமான வரிச் சோதனையாளர்கள், மத்திய அரசு மட்டுமின்றித் தற்போது தமிழகத்தில் “தீவிர”மாகி விட்ட பருவமழையும் தீவிரவாதிப் பட்டியலில் இடம் பெற்று விடும்.
Terrorism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, ‘பயங்கர ஆட்சிமுறை’, ‘பயங்கரக் கொள்கை (இயக்கம்)’, ‘அச்சுறுத்திப் பணிய வைத்தல்’ ஆகிய தமிழ்ப் பொருள்களும் Terrorist என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, ‘பயங்கரவாதி’, ‘வன்முறைப் புரட்சிக்காரன்’, ‘அச்சுறுத்தி ஆள்பவன்’ ஆகிய பொருள்களும் அகராதியில் காணப் படுகின்றன.
ஆனால், தமிழில் வெளிவரும் அனைத்து இதழ்களும் Terroristஐத் தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தி, “ஈடுபடும் காரியத்தில் தெளிவுடனும் உறுதியுடனும் செயல்படுபவன்” என்ற அகராதி பொருளைப் அர்த்தமற்றதாக்கி, “ஆயுதங்களால் மக்களை அநியாயமாகக் கொல்பவன்” என்ற ஒரே பொருள் சார்ந்த அச்சத்தை மக்களின் மனதில் விதைத்து விட்டன.
இந்தத் ‘தீவிரவாதி’ என்ற பூச்சாண்டியைக் காட்டியே நாட்டில்-உலகில் “தெளிவான தீவிரவாதிகள்” செய்து முடித்துள்ள, செய்ய எண்ணியுள்ள செயல்களும் திட்டங்களும் எழுத்தில் வடிக்க இயலாதவை.
யார் இந்தத் தெளிவான தீவிரவாதிகள்?.
தீவிரவாதிக்கான புதிய அர்த்தத்தின்படி, “தான் கருவறுக்க நினைப்பவர்களைப் பூண்டோடு அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் முறையாகத் திட்டமிட்டு இறுதிவரை அதனைச் செயல்படுத்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்பவன்”ஐத் தமிழிதழியலின் சம்பிராதயத்தைப் பின்பற்றி, “தெளிவான தீவிரவாதி” என்றே தற்காலிகமாகச் சொல்லி வைப்போம்.
அந்த வகையில் இன்று கண்முன் நிழலாடுபவர்கள் இருவரே. முதலாமவர், இருபதாம் நூற்றாண்டிற்குத் தீவிரவாதத்தைப் பரிசளித்த உலகத் தீவிரவாதி ஜார்ஜ் புஷ். இரண்டாமவர், இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே “நவீன நீரோ” எனப் புகழ்மாலை சூட்டப்பட்ட இந்தியாவின் ஒரே மாநில முதல்வர் நரேந்திர மோடி.
“இஸ்லாமியத் தீவிரவாதம்” எனத் தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தை அடைமொழி கொடுத்த புஷ், இஸ்லாமிய மக்கள் நிறைந்து வாழும் ஆப்கான் மற்றும் ஈராக்கில் கொன்று குவித்த அப்பாவி முஸ்லிம்களின் எண்ணிகை மில்லியன்களைத் தாண்டும்
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியத் தலைநகரம் டில்லியில் நடந்த மத-அரசியல் தலைவர்களின் சர்வதேசத் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்த தலாய்லாமா, “இஸ்லாம் என்பது சமாதானத்தின் மார்க்கமாகும். அது ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததில்லை. அப்படியிருக்கையில் தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் குறிவைப்பது வேதனைக்குரியதாகும். முஸ்லிம்கள் உலகில் சமாதானத்தை விரும்புபவர்களாவர். ஓர் உண்மையான முஸ்லிமிற்கு ஒரு போதும் தீவிரவாதி ஆக இயலாது” எனக் கூறினார்.
தலாய் லாமா கூறியதில், “அமைதியைப் போதிக்கும் / விரும்பும் இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிமால் தீவிரவாதியாக ஒருபோதும் இயலாது” என்ற சொற்கள் ஊன்றிக் கவனிக்கத்தக்கவை.
ஆனால் இவையெல்லாம் தெளிவான திட்டங்களுடன் அரசு இயந்திரங்களை உபயோகித்து தீவிரவாதத்தில் ஈடுபடும் புஷ் மற்றும் மோடி போன்ற தெளிவான தீவிரவாதிகளுக்கு மூளையில் ஏறப்போவதில்லை.
அந்த மாநாட்டிற்குப் பின்னர் டில்லி ஜுமா மஸ்ஜிதின் இமாம் புகாரி பேசியதில் சில வாசகங்களும் இங்கு கவனிக்கத்தக்கவை..
“நரேந்திரமோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்வரை அங்கு இன அழித்தொழிப்பு ஓயாது. இன்றுவரை தீவிரவாதி என்ற பெயரில் பல அப்பாவி இளைஞர்களை மோடி என்கவுண்டர் என்ற பெயரில் அழித்து வருகிறார். ஆனால் உண்மையான தீவிரவாதி மோடிதான்.
குஜராத் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதியாக்கப்பட வேண்டும். ஆனால் அது மோடி முதல்வராக இருக்கும்வரை நம்மால் எதிர்பார்க்க இயலாத ஒன்று. தங்களை அநியாயமாக அழிப்பவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோபமே பலரைத் தீவிரவாதத்தில் கொண்டு சேர்க்கின்றது.
தன் சொந்தச் சகோதர-சகோதரிகள், பெற்றோர், பச்சிளம் பாலகர்கள் தன் கண் முன்னே வைத்து கொடுமைப் படுத்தப்பட்டும் மானபங்கப் படுத்தப்பட்டும் கொல்லப்படும்போது தடுக்க வேண்டிய காவல்துறையே தீவிரவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும் ஒருவன் – இறுதியாக நீதிமன்றக் கதவுகளைத் தட்டி, அங்கும் எவ்வித நீதியும் கிடைக்காமல் போனால் அவன் என்ன தான் செய்வான்ர்?. யாருக்காக வாழ வேண்டுமோ அவர்கள் அனைவரும் தன் கண் முன்னால் அநியாயமாகக் கொலையுண்ட பின்னர், தனக்கு நீதியும் மறுக்கப் பட்ட அத்தகைய நிலையில் அவன் தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் தீவிரவாதச் செயல்களின் பக்கம் திரும்பாமல் இருந்தாலே அது அற்புதமாகும்.
கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கு நீதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க இயலும்” என இமாம் புகாரி கூறினார்.
இமாம் புகாரியின் கருத்தை நாம் இங்கு எடுத்தெழுதுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.
கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது தோழர் வாஜ்பாயின் வெற்றிக்காக பாஜகவுக்கு ஓட்டு கேட்டவர்தான் இவர். முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட எவனும் இந்தியத் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாஜகவிற்காக ஓட்டு கேட்க மாட்டான் என்பது திண்ணம்.
அப்படியிருக்க பாஜக அனுதாபியான இவர், அதே பாஜகவின் மாநில முதல்வர் மோடியினைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கின்றார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமேயாகும்.
தனது தலைமைபீடம் பயிற்றுவித்த, “முஸ்லிம்களை அடியோடு அழித்தல்” என்ற அடிப்படை அஜண்டாவை அப்படியே உள்வாங்கி, துவக்கம் முதல் மிகச் சரியாகத் திட்டமிட்டு அதனை குஜராத்தில் நடைமுறைப் படுத்துபவர்தான் மோடி.
அதற்காகத் தனது இன மக்களைக்கூட காவுகொடுக்கத் தயாரானவன் தெளிவான தீவிரவாதியல்லாமல் வேறென்ன?
உலகில் இஸ்லாமியர்களின் தலைமீது தீவிரவாதச் சுமையைத் தூக்கி வைத்து, அவர்களை அழிக்கத் தன் சொந்த நாட்டு மக்களையே காவு கொடுக்கும், உலகத்திலேயே தெளிவான தீவிரவாதியான புஷ்ஷை அடியொற்றி, குஜராத் முஸ்லிம்களை அழிக்கத் தன் இன மக்களான “கரசேவகர்களையே ரயிலில் வைத்துப் பூண்டோடு எரித்த” மோடி, தொடர்ந்த முஸ்லிம் மக்களின் இன அழிப்பிற்காகப் பல மாதங்களுக்கு முன்னரே தயாராகி இருந்தது இன்று வெளிக்கொணரப் பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்றதிலிருந்து இதுவரை போலி என்கவுண்டர் மூலம் காவல்துறையால் சுட்டுத் தள்ளப் பட்ட – சொஹ்ரப்தீன் தம்பதியினர் உட்பட - முஸ்லிம்களின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்குகிறது. படுகொலை செய்யப் பட்ட அனைவர் மீதும் “மோடியைக் கொல்லச் சதி செய்தார்கள்” என்ற ஒரேயொரு போலியான குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. நாட்டுத் துப்பாக்கிகள் ‘வைத்து’ எடுக்கப் பட்டன. ஆனால், நேர்மையான சில பத்திரிகைகளாலும் நல்ல மனம் படைத்த நடுநிலையாளர் சிலராலும் உண்மை வெளிச்சத்துக்குக் கொண்டு வரப் பட்டது. போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளிய குற்றத்துக்காக மூன்று IPS கொலைகார அதிகாரிகள் கைது செய்யப் பட்ட செய்தி, நாட்டையே ஓர் உலுக்கு உலுக்கி எடுத்தது. பள்ளிப் படிப்பைப் படிப்பதற்குக்கூட வசதியில்லாமல் முஸ்லிம்கள் போட்ட பிச்சையில் படித்தவனும் பதின்மூன்று முஸ்லிம்களைப் போலி என்கவுண்டரில் கொன்றவனுமான டி.பி. வன்சாரா என்ற அயோக்கியக் கொலைகாரன் IPS-க்கு 150 கோடி வரை சொத்துகள் பரிசளிக்கப் பட்டுள்ளன.
கருவறுக்கப்பட்டது போக, அனைத்தையும் இழந்து சொந்த மண்ணில் அகதி முகாம்களில், அடிமனதில் அடங்காத பீதியுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குத் தினசரி வாழ்வாதார உரிமைகளைக்கூட கொடுக்காமல் மறுத்து வருவது மோடியின் திட்டத்தின் மற்றொரு கட்டத்தைச் செயல்படுத்துவதன் ஒரு பாகமே.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் தடுப்பதும் அதன் மற்றொரு கட்டம்தான். இதனைத் தான் இமாம் புகாரி அடிகோடிட்டுள்ளார்.
இதோ இன்று தனது நாட்டில் நடைமுறைபடுத்திய அதே திட்டத்தைக் கர்நாடகத்திலும் “குஜராத் மாடல் பின்பற்றப்படும்” எனத் தனது மற்றொரு சக சங்கத்தோழனான எடியூரப்பாவிற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார் மோடி.
இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் வகுத்தளித்த “முஸ்லிம் இன அழிப்பை”த் திட்டமிட்டு நடைமுறைபடுத்த முயலும் மோடியை இந்தியாவின் நம்பர் ஒன் தெளிவான தீவிரவாதி என்று தாராளமாகக் கூறலாம்.
“கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்” என்ற உவமைச் சொலவடையை உண்மைப் படுத்துவதுபோல் பெரும்பாலும் தீவிரவாதிகளுக்கு இறுதி முடிவு என்பது “என்கவுண்டர்” போன்று ஏதாவது விரும்பத்தகாத துர்முடிவாகவே இருக்கும்.
இன்று உலகிலும் இந்தியாவிலும் தெளிவான தீவிரவாதிகளாக வலம் வரும் புஷ் மற்றும் மோடி தீவிரவாதிகளின் முடிவு…?
இவர்களால் பாதிக்கப்பட்டு இன்றும் நீதி மறுக்கப்பட்டு மனதில் அடங்காக் குமுறலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களுக்கான நீதி கிடைப்பதைப் பொறுத்தே இவ்விருவரின் முடிவும் அமையும்.
இந்தத் தெளிவான தீவிரவாதிகளால் அநியாயத்திற்குள்ளாக்கப்பட்டு, மறுக்கப்பட்ட நீதியுடன் உலாவரும் எண்ணிலடங்கா அப்பாவி மக்களை, இவர்களைப் போன்றவர்களுக்கு எதிரான மற்றொரு தீவிரவாதக் கூட்டமாக மாற்றாமல் இருப்பதற்கான கடமை இவ்வுலகில் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு.
muslimpage.blogspot
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம்: செ.பத்மநாதன்
| இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது. தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது. இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம். நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கிறோம். இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம். தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை. இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை. இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது. இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது. இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும். அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும். இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும். இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும். தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும். இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளால் பதுக்கி வைக்கபட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு.
njhlu;e;J NjLjypy; <Lgl;LtUk; ghJfhg;Gg; gilapdu; New;W khiy Ky;iyj;jPT> nts;is Ks;sp tha;f;fhy; gFjpf;F mz;kpj;j flypy; Gypfspd; kw;nwhU ePu; %o;fpnahd;iw fz;nlLj;jpUg;gjhf ,uhZtg; Ngr;rhsu; mYtyf mjpfhup nahUtu; njuptpj;jhu;. ehd;F mbfs; cauKk;> 24 mbfs; ePsKk; nfhz;l ,e;j ePu;%o;fp nts;isKs;sp tha;f;fhy; gpuNjrj;jpd; fiuapypUe;J rpy kPl;lu;fs; J}uj;jpy; flypypUe;J kPl;fg;gl;bUg;gjhfTk; mt;tjpfhup $wpdhu;. ,e;ePu;%o;fp Vw;fdNt ghtpf;fg;gl;bUg;gjhfTk; Muk;g tprhuizfspy; njupate;jpUg;gjhfTk; mtu; Fwpg;gpl;lhu



இனவாதக் கருத்துக்களைத் முன்னெடுத்துவரும் அரசில் அங்கம் வகிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இனவாதக் கருத்துக்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருபவர்களான அரசில் அங்கம் வகிக்கும் விமல்வீரவன்ச, உதய கம்மன்வல போன்றவர்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது மௌனம் சாதித்து வருவது கவலையளிக்கும் விடயமாகுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், ஜனாதிபதி யுத்த நிறைவை அறிவித்தபோது இனப்பிரச்சினைக்கான தீர்வு எடுத்துக் கூறியுள்ளார். சிறுபான்மையினர் என தமிழினமில்லை. சம உரிமையோடு அனைவரும் வாழவேண்டும் எனக் கூறியமை வரவேற்புக்குரியது. ஆனால் ஒரே ஒரு கேள்வியை மட்டும் மன உளைச்சலுடன் கேட்க விரும்புகிறேன். விமல்வீரவன்ச போன்றோ ஹெலஉறுமய உதய கம்மன்வில போன்றோ சிங்கள இனவாதத்தை பேச எமக்கு சம உரிமை உண்டா? அவ்விதம் நாம் இனவாதம் பேசினால் பிரிவினை கோரினோம். நாட்டின் இன சௌஜன்யத்தை சீரளிக்கிறோம் என பயங்கரவாதப் பிரிவினரால் விசாரிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் இன சௌஜன்யம் மிக்க ஸ்ரீலங்காவை உருவாக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
athirady.org













