Lankamuslim.org

One World One Ummah

Archive for May 27th, 2009

இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு லட்சம் பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள்

இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு லட்சம் பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அரச தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் வேறொரு தலைமையின் கீழ் போராட்டத்தை தொடக்க முயற்சி செய்யலாம் அதைதடுக்கும்  வகையில் இராணுவத்தில் கூடுதலாக ஒருலட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் எனவே இதன்மூலம் இராணுவத்தினரின் எண்ணிக்கை மொத்தம் 3லட்சமாக உயரும் விடுதலைப்புலிகள் முன்போல் இனி இலங்கையில் ஒன்றிணைவது சுலபமல்ல இதுவரை 22ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் தற்போது 9ஆயிரம் பேர் சரணடைந்துள்ளனர் என இராணுவத் தளபதி மேலும் தெரிவி;த்தார்.

Written by lankamuslim

May 27, 2009 at 3:06 pm

சிறிலங்கா விவகாரம் ஐ.நா.வில் பிளவு: சிறிலங்காவுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்த மூன்று நாடுகள்

சிறிலங்கா மீதான சிறப்பு விவாதம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் சிறிலங்கா மீதான விசாரணைகள் அவசியம் என தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை தேவை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான நாடுகளும், இது அதற்கான தருணம் அல்ல என சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளும் தெரிவித்திருக்கின்றன.

மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளில் சில இந்த சிறப்பு விவாதத்தை பலவந்தமாக திணித்துள்ளன. ஆனால், இது தேவையற்றது. சிறிலங்கா தொடர்பான விவாதத்தை சாதாரண கூட்டத்தில் விவாதிக்கலாம் என சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் இந்தியாவுக்கான தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஸ்யாவும் சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.

கியூபாவும் சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. முன்பு பல நாடுகளை ஆண்ட நாடுகள் தற்போது சிறிய அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டை சிறுமைப்படுத்துவதாக கியூபா குற்றம் சாட்டியுள்ளதுடன், அது ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக சாடியிருந்தது.

பாகிஸ்தான், கட்டார், ஜோர்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கானா நிக்கரகுவா, சவூதி அரேபியா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகள் சிறிலங்காவின் தீர்மானத்திற்கு ஆதரவுகளை வழங்கியுள்ளன.

ஆனால், சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைகள் தேவை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருக்கின்றார்.

இறுதிக்கட்ட மோதல்களின்போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடாபாக விசாரணைகள் தேவை. சுயாதீனமானதும், காத்திரமானதுமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தலைமையிலான நாடுகள் சார்பாக செக் குடியரசும் கருத்துக்களை வெளியிட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. ஆனால், சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களை மதிக்கவில்லை. மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக இடம்பெயர்ந்து இருந்தபோதும் சிறிலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என அது தெரிவித்திருக்கின்றது.

மோதல்களின் பின்னர் நாம் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பலவந்தமாக காணாமல் போதல், தடுத்துவைத்தல், கடத்தல், கருத்து சுதந்திரத்தை தடுத்தல் போன்றவை கவலையை தருகின்றன எனவும் செக் குடியரசு தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்றனவும் சிறிலங்கா மீதான விசாரணைக்கு ஆதரவுகளை தெரிவித்திருக்கின்றன.

இத்தாலி, சுலோவேனியா, மெக்சிகோ, பிரேசில், சிலி போன்ற நாடுகளும் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது கவனத்தை தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

May 27, 2009 at 9:03 am

இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய அணிவகுப்பில் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளும் இணைந்து கொண்டுள்ளனர்!

சாருமணி
வன்னியில் புலிகளை அழிக்கும் இறுதி நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டிருந்த இறுதி நாட்களில், ஏகாதிபத்திய மேற்கு நாடுகளும், அவர்களது ஊடகங்களும், சில ஐ.நா அதிகாரிகளும், மனித உரிமை அமைப்புகள் என்பனவும் நடந்துகொண்ட முறையிலிருந்து, அவர்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாக்க முற்பட்டமை மிகத்தெளிவாகத் தெரிகின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்டு, யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட, ஏதாவது ஒரு வகையில் இலங்கை அரசை பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த ஏகாதிபத்திய சக்திகள் செயல்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசு உலகின் மிக மோசமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்ததையிட்டு மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, இந்த சக்திகள் இலங்கை அரசை நோக்கி விரல்களை நீட்டுவதன் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில் அரசியல் தெரிந்தவர்களுக்கு மிகச்சுலபமானது. இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், முன்னையது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது என்பதையும், பின்னையது ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமானது என்பதையும் ஒருவர் விளங்கிக் கொள்வது அப்படியொன்றும் சிரமமானது அல்ல.
முன்னைய காலங்களில் மேற்குலகுக்கு எதிராக இருந்த (சோவியத்துடன் சேர்ந்து) இந்தியாவைச் சுற்றி வளைப்பதற்கு, ஏகாதிபத்தியம் பாகிஸ்தானை தீனி போட்டு வளர்த்ததுடன், இலங்கையையும் கைக்குள் போடும் பாணியில் நடந்து வந்தது. ஆனால் இந்தியாவில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, சோவியத்தும் தகர்ந்து, இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சியும், சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசுகளும் வந்த பின்னர், இந்திய – மேற்குலக தேன்நிலவு ஆரம்பமானது. அதன்பின்னர் பாகிஸ்தானும், இலங்கையும் பாவித்த கறிவேப்பிலைகளாக மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தால் தூக்கிவீசப்பட்டன. இலங்கை அரசின் ஆதரவு தேவை என்று கருதப்பட்ட காலத்தில், மேற்குலகம் புலிகளைத் தடைசெய்து, இலங்கை அரசைத் திருப்திப்படுத்தியது. ஆனாலும் அப்பொழுது கூட, வலதுசாரி பாசிச இயக்கமான புலிகளுடன் ஏகாதிபத்தியம் கள்ள உறவுகளைப் பேணியதுடன், நோர்வே ஊடாக பல்வேறு உதவிகளையும் அளித்து வந்தது. இந்த ‘பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும்’ ஏகாதிபத்திய விளையாட்டு, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் முடிவுக்கு வந்தது.

மகிந்த அரசு புலிகளை ஒழித்துக்கட்டியே தீருவது என்று தீர்மானித்து நடவடிக்கையில் இறங்கியதும், எகாதிபத்தியமும் தனது சுயரூபத்தை வெளியே கொண்டு வந்தது. இலங்கைக்கு எதிராக பொருளாதார முற்றுகை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு, ஊடக சுதந்திர மீறல் கண்டனம் என அஸ்திரங்களை ஏவியது. ஆனால் அவையெல்லாம் இலங்கை அரசுக்கு ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யா, ஈரான், லிபியா போன்ற நாடுகள் வழங்கிய ஆதரவால் தோற்றுப்போயின. மேற்குலகுக்கு எதிரான நாடுகள் ஓரணியில் நின்று இலங்கையை ஆதரித்ததால் கோபமடைந்த ஏகாதிபத்தியம், இப்பொழுது இலங்கைக்கு எதிரான ஒரு வெறிநிலைக்கு சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஏகாதிபத்தியத்தின் வெறிக்கோஷ்டியில் இப்பொழுது சியோனிஸ இஸ்ரேலும் இணைந்து கொண்டுள்ளது. அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு இலங்கை தெரிவாவதிற்கு இஸ்ரேல் தனது எதிர்;ப்பைத் தெரிவித்ததின் மூலம் அதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மோசமான நிலையில் இருப்பதால் தான், இலங்கை தலைமைப்பதவிக்கு தெரிவாவதை தான் எதிர்ப்பதாக அது காரணம் வேறு கூறியுள்ளது. இதைக்கேட்கும் போது, விழுந்து விழுந்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஏனெனில் 1947ல் இஸ்ரேல், அமெரிக்க – பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் வலிந்து உருவாக்கப்பட்ட நாளிலிருந்து, அது பாலஸ்தீன மற்றும் மத்திய கிழக்கு ஆசியா, வடஆபிரிக்கா அரபு மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள், ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக மேற்கொண்ட அட்டூழியங்களை தூக்கியடித்துவிடும் அளவுக்கு மோசமானவையாகும். அப்படியான ஒரு நாடு இலங்கையைப் பார்த்து மனித உரிமை மீறல் குறித்து கூக்குரலிடுவது வேடிக்கையே. உண்மையென்னவென்றால் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளின் ஏகாதிபத்திய அணிசேர்க்கையும், இலங்கைத் தமிழ் பிற்போக்கு சக்திகளுடனான தொப்புள் கொடி உறவுமே இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகும். நீண்ட காலத்துக்கு முன்பே இனவாத, பிற்போக்குவாத தமிழரசுக்கட்சியின் தலைவர்கள், இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்கு இஸ்ரேலின் உருவாக்கத்தை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டுவது ஒரு வழமையாக இருந்து வந்துள்ளது. உலகம் முழுவதும், இஸ்ரேல் செய்துவரும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து வந்தபோதும், தமிழ் தலைமைகள் ஒருபோதும் கண்டித்தது கிடையாது.
தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடுவதாக தம்பட்டம் அடித்துவந்த இந்த தமிழ் தலைமைகள், பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு சிறு ஆதரவு கூட தெரிவிக்காதது, அவர்களது ‘விடுதலை’ என்பது என்ன வகையானது என்பதைப் புரிந்து கொள்ள உதவும். பின்னர் தமிழ் பிற்போக்கு சக்திகளின் தலைக்கிடாயாக விடுதலைப்புலிகள் உருவான போது, அந்த இயக்கம் முதல் செய்த வேலை, இஸ்ரேல் உருவாக்கம் சம்பந்தமான மிகப்பெரிய வரலாற்று நூலை தமிழில் மொழிபெயர்த்து, அச்சிட்டு தமது இயக்கத்தினருக்கு பாட நூலாக நடைமுறைப்படுத்தியது தான். அதுமட்டுமின்றி தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் உருவான 80களில், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தலைமையிலான ஐ.தே.க கொடிய இனவெறி அரசாங்கம் பதவியில் இருந்தது. அந்த நேரத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்தபோது, புலிகள் இஸ்ரேலிய ‘மொசாட்’ உளவு அமைப்பிடம் ஆயுதப்பயிற்சி எடுத்தனர்! அதுவும் மொசாட் ஒரு பக்கத்தில் இலங்கை ஆயுதப்படைகளுக்கும், அதன் அருகிலேயே புலிகளுக்கும் ஆயுதப்பயிற்சி வழங்கியது தான் சுவாரசியமானதும், உண்மையை புட்டு வைத்த நிகழ்வுமாகும். இஸ்ரேலின், இலங்கை அரசுக்கு எதிரான தற்போதைய நிலைப்பாட்டுக்கு வேறு சில காரணங்களும் உண்டு. இலங்கையில் ஆட்சியிலிருந்த எல்லா சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கங்களுமே பாலஸ்தீன மக்களுக்கு எதிரான, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து வந்துள்ளன. இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளையும் அவை வைக்கவில்லை. ஜே.ஆரின் ஐ.தே.க கட்சி ஆட்சிக் காலத்திலேயே இஸ்ரேல் கொழும்பில் தனது தூதரகத்தை திறக்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல், இன்றைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை – பாலஸ்தீன நட்புறவு இயக்கத்தின் தலைவராக இருந்து வருகின்றார்.
இவையெல்லாம் இஸ்ரேலுக்கும் அதன் எஜமானர்களுக்கும் கசப்பான விடயங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஏகாதிபத்திய நாடுகளும், அவர்களது ஊடக, மனித உரிமை, பொருளாதார பரிவாரங்களும், இலங்கைக்கு எதிராக என்னதான் சன்னதம் ஆடினாலும், இலங்கை மக்கள் உலகளாவிய தமது நட்பு சக்திகளின் உதவியுடன், அவற்றையெல்லாம் முறியடிப்பார்கள் என்பது நிச்சயம்.“போரிடுவது, தோல்வியடைவது, மீண்டும் போரிடுவது, மீண்டும் தோல்வியடைவது, இதுதான் பிற்போக்குவாதிகள் தமது அழிவுவரை பின்பற்றும் நடைமுறையாகும்” என சீன மக்களின் மாபெரும் தலைவர் மாஓசேதுங் ஒருமுறை கூறியது, இலங்கை சம்பந்தமாக ஏகாதிபத்தியவாதிகள் இன்று மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கும் மிகப் பொருத்தமானது என்பதை, இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது சாலவும் பொருத்தமானதாகும். பின்னிணைப்பு : உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62வது பொதுச்சபை கூட்டத்தொடரின் போது, அதன் நடப்பு ஆண்டுத் தலைவராக, இலங்கையின் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்ரேல் தீர்மானமொன்றைக் கொண்டு வந்திருந்தது தெரிந்ததே. 192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தில், இஸ்ரேலின் தீர்மானத்தை ஒரு நாடு கூட ஆதரிக்காதலால், அது படுதோல்வி அடைந்தது. இலங்கை அமைச்சர் சில்வா அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மனித உரிமை மீறலில் உலகின் முன்னணியில் இருக்கும் இஸ்ரேல், இப்பொழுதாவது உலகில் தனது செல்வாக்கின் ‘மகிமை’ புரிந்துகொண்டால் சரி!
thanks.thenee

Written by lankamuslim

May 27, 2009 at 5:38 am

இறுதி யுத்தத்தில் 24,100 படையினர் பலி! – சிங்கள ஊடகம்

தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக இறுதியாக சிறிலங்கா அரசாங்கம் 2006 இல் மாவிலாற்றில் ஆரம்பித்த படை நடவடிக்கைகளில் இருந்து இறுதிப்படை நடவடிக்கைகள்வரை சிறி லங்கா இராணுவத்தில் 24 100 இராணுவத்தினர் பலியாகியிருப்பதாகவும், (இதில் தப்பியோடியோர் -காணாமற்போனோர் பட்டியல் உள்ளடக்கப்படவில்லை) இராணுவப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் இந்த எண்ணிக்கைகளை தலைகீழாக மாற்றியே சிறி லங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிங்கள அமைப்பொன்றை ஆதாரமாகக்காட்டி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.அதில் ஆரம்பம் முதலே தமது இழப்புக்களை சிறி லங்கா இராணுவத்தினர் மிகையாக குறைத்தே செய்திகளை வெளியிட்டுவருவதாக சிங்கள மக்களுக்கே புரியும் எனவும், அவர்கள் வாழை மரக்குற்றிகளை தமது பிள்ளைகளின் சடலம் என்று சொல்லப்பட்டே இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே மாவிலாறு மற்றும் கிழக்கு மாகாண விடுவிப்பின்போது 2 900 இராணுவத்தினரும், வடக்கு கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1300 இராணுவத்தினரும் (கபறனை தாக்குதல் உட்பட), மன்னார் பிரதேசங்களில் எற்பட்ட மோதல்களின்போது 3100 இராணுவத்தினரும், மாங்குளம் பிரதேச மீட்பின்போது 2500 பேரும், மல்லாவி, துணுக்காய் பகுதிகளின் மீட்பின்போது 3500 பேரும், பின்னர் நடந்த இடை மோதல்களில் 1700 பேரும் பூனகரி மோதல்களின்போது 4200 பேரும், கிளிநொச்சி கைப்பற்றுதலில் 2600 பேரும், பின்னர் விடுதலைப்புலிகளின் கிளிநொச்சி ஊடறுப்புத்தாக்குதலில், 2300 பேரும், விடுதலைப்புலிகளின் குளம் உடைப்புத்தாக்குதலில் 3300 பேரும் பின்னர் இடம்பெற்ற இறுதித்தாக்குதலில் மிகுதி இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமது தரப்பு இழப்புக்கள் பற்றி குறிப்பிட்ட சிறி லங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இறுதிமோதல்களில் 6200 படையினர் மட்டுமே பலியானதாகவும், இத்தனைநாள் இடம்பெற்றமோதல்களில் சுமார் 22 அயிரம் வரையான படைவீரர்களே இறந்துள்ளதாக தெரிவித்தமை மிகவும் கேலிக்குரியதெனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

thank Ilakku

//
//

Written by lankamuslim

May 27, 2009 at 5:27 am

புத்தளம் பல்லம காட்டுப்பகுதியில் வைத்து கொள்ளைகளுடன் தொடர்புடைய

புத்தளம் பல்லம காட்டுப்பகுதியில் வைத்து கொள்ளைகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றுகாலை 10மணியளவில் கைது செய்யப்பட்டதாக பல்லம பொலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இன்றுகாலை முந்தல் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், பின்னர் பொலீசார் தேடிச்சென்ற வேளையில் பல்லம காட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்த போது காட்டிலுள்ள கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இரண்டு சந்தேகநபர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் தற்போது முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கைப்பற்றியிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

Written by lankamuslim

May 27, 2009 at 5:22 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,827 other followers